தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு  எண்ணிக்கை நாள்தோறும் மாலை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியிடப்பட்ட தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30,580 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 40 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ள தமிழக அரசு, 24, 483 பேர் டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,33,990 எனக் தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ALSO READ | ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து? - அமைச்சர் சுப்பிரமணியன் விளக்கம்


28 லட்சத்து 95 ஆயிரத்து 818 பேர் இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். ஒட்டுமொத்தமாக இதுவரை கொரோனா வைரஸூக்கு தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 218 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 6,383 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் சென்னையில் கொரோனா வைரஸூக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 54, 572 ஆக அதிகரித்துள்ளது. 


தமிழகத்தில் இந்தியாவிலேயே தினசரி கொரோனா பரிசோதனை அதிகபட்சமாக செய்யப்பட்டு வருகிறது. சுமார் 325 மையங்களில் தினசரி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. அரசு சார்பில் மட்டும் 69 மையங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது. எஞ்சியவை தனியார் மையங்கள் எனக் கூறியுள்ளது. மக்கள் கொரோனா வைரஸ் பரவலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது


ALSO READ | போலீஸ் அதிகாரியே முக கவசம் அணியாமல் போலீசாரிடம் வாக்குவாதம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR