கரூர் அருகே அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட லிங்கமா நாயக்கன்பட்டி மற்றும் பள்ளப்பட்டி நகராட்சி பகுதியில் 8 நாய்கள் ஒரு சிறுவனை துரத்தும் வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.  கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி அடுத்து லிங்கம நாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக இருக்கின்றது என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 'தாத்தா இது தேவையா’: பெண்ணை பார்த்து முதியவர் செய்த செயல், ஷாக் ஆன நெட்டிசன்கள் 


இந்நிலையில் இன்று எட்டு நாய்களுக்கு மேல் சேர்ந்து, ஒரு சிறுவனை விரட்டும் காட்சி காண்போரை பதைபதைக்க வைக்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.  உடனடியாக அருகில் இருந்தவர்கள் உதவியதால் அந்த சிறுவன் உயிர் தப்பினார்.