கல்லூரி மாணவர்களுக்கு இன்று முதல் தினசரி 2GB இலவச டேட்டா திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா வைரஸ் (CoronaVirus) காரணமாக கடந்த 10 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் (School) மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதற்கிடையில், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு (Online Class) மூலம் கல்வி கற்பித்து வருகின்றனர். இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெரும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் தினசரி 2GB இலவச டேட்டா திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி (Edappadi Palaniswami). இந்த திட்டத்தின் மூலம் சுமார் 9,69,047 மாணவர்கள் பலனடைவார்கள். 


ஜனவரி முதல் ஏப்ரல் 2021 வரை 4 மாதங்களுக்கு எல்காட் நிறுவனம் மூலமாக இணையவழியில் கல்விகற்கும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தினசரி 2GB டேட்டா இலவசமாக வழங்குவதாக தமிழக அரசு (TN Govt) ஏற்கனவே உத்தரவிட்டது. இந்நிலையில், ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் கலந்து கொள்ள உதவிடும் வகையில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித் தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9,69,047 மாணவர்களுக்கு நான்கு மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2GB டேட்டா பெற்றிட எல்காட் நிறுவனத்தின் மூலமாக, விலையில்லா டேட்டா கார்டு வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.


ALSO READ | தமிழகத்தில் பிப்.,8 முதல் 9, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!


ஏப்ரல் 2021 வரை எல்காட் நிறுவனம் மூலமாக இணையவழியில் கல்விகற்கும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தினசரி 2GB டேட்டா இலவசமாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள்,பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச டேட்டா கார்டு வழங்கப்படவுள்ளது. இன்று இந்த திட்டத்தை முதல்வர் பழனிச்சாமி இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்துள்ளார்.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR