காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்தவர் பவித்ரா. இவர் கடந்த மூன்று வருடமாக தனது கிராமத்துக்கு அடுத்த மேம்பாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். காதலிக்கும் சமயத்தில் இருவரும் பல்வேறு இடங்களுக்கு  சென்றுள்ளனர். திருமணம் செய்வதாக அளித்த  வாக்குறுதியை நம்பி இருவரும் உல்லாசமாக இருந்ததுள்ளனர்.  இதில் கர்ப்பம் அடைந்துள்ளார் பவித்ரா. இது குறித்து விக்னேஷிடம் அவர் தெரிவித்த நிலையில், கர்ப்பமான பெண்ணை எங்களது குடும்பத்தில் திருமணம் செய்ய விட மாட்டார்கள் என கூறி பவித்ராவிற்கு கருக்கலைப்பு மாத்திரை மூலம் கருக்கலைப்பு நடந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | வெங்காயத்தின் விலையை கேட்டாலே கண்ணீர் வருகிறது! ஆர்.பி. உதயகுமார்!


இந்நிலையில் பவித்ராவுக்கு திடீரென ஒரு பெண் மொபைலில் அழைத்து, அவரது தங்கையை உன்னுடைய காதலன் காதலிப்பதாக தெரிவித்துள்ளார். அவர் இருவரையும் ஏமாற்றுவதாகவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து இதுகுறித்து விக்னேஷிடம் பவித்ரா கேட்டபோது மறுத்து உள்ளார். உடனடியாக தன்னை திருமணம் செய்யுமாறு பவித்ரா விக்னேஷை வற்புறுத்தியுள்ளார். அவரது குடும்பத்துடனும் இது குறித்து பேசியுள்ளார். 



ஆனால் அவர்கள் இது குறித்து கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. மனமுடைந்த பவித்ரா ஸ்ரீபெரும்புதூர் மகளிர் காவல்நிலையம் மற்றும் டிஎஸ்பி அலுவலகம் என தொடர்ச்சியாக புகார் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் மீது காவல்துறையினர் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. 18 நாட்களாக காத்திருந்த பவித்ரா காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு குடும்பத்துடன் நேரில் சென்று புகார் அளித்துள்ளார்.  



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாதிக்கப்பட்ட பெண் பவித்ரா, தன்னை ஆசை வார்த்தைக் கூறி ஏமாற்றிவிட்டு, இப்போது திருமணம் செய்ய மறுத்துவரும் விக்னேஷ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதுமட்டுமல்லாமல், ஸ்ரீபெரும்புதூர் மகளிர் காவல்நிலையத்தில் இருப்பவர்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் நஷ்ட ஈடு பெற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்துவது தனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் பவித்ரா கூறியுள்ளார். இது குறித்து காவல்துறையின் நடவடிக்கைக்கு காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | சத்ய பிரியா கொலை வழக்கு: கொலைகாரனை குண்டர் சட்டத்திலிருந்து விடுவித்த நீதிமன்றம்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ