வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெப்ப சலனம் மற்றும் தென் தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கிருஷ்ணகிரி ,தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் (Heavy Rain), ஈரோடு ,திருப்பத்தூர் ,வேலூர் ,ராணிப்பேட்டை, திருவள்ளூர் ,திருவண்ணாமலை, திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.


ALSO READ | Weather Forecast: தமிழகத்தில் பரவலாக மழை பெய்யலாம்


மேலும் உள்மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் (Rain) பெய்ய கூடும். அதேபோல் வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை 2 இல் இருந்து 4 டிகிரி வரை உயரக்கூடும் எனவும், மத்திய வங்கக்கடலில் புயல் உருவாவதால் தமிழகத்தில் தரைக்காற்று வீச வாய்ப்புள்ளதால் வறண்ட வானிலை நிலவும் என தெரிவித்துள்ளது. 


அடுத்த நான்கு நாட்களுக்கு, தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் நீலகிரி ,தேனி ,ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR