Weather Forecast: தமிழகத்தில் இன்று முதல் மே 15 வரை பரவலாக மழை பெய்யலாம்

தமிழகத்தில் இன்று முதல் மே 15ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 12, 2021, 07:16 AM IST
  • தமிழகத்தில் இன்று முதல் மே 15 வரை பரவலாக மழை பெய்யலாம்
  • குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது
  • தென் தமிழக மாவட்டங்களில் 13-ம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யும்
Weather Forecast: தமிழகத்தில் இன்று முதல் மே 15 வரை பரவலாக மழை பெய்யலாம் title=

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் மே 15ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டுள்ளது.

குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று முதல் 15-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை இது:
குமரிக் கடல் மற்றும் அதை ஒட்டிய தென் தமிழக பகுதிகளில் 1.5 முதல் 3.1 கி.மீ. உயரம் வரை வளிமண்டல மேல டுக்கு சுழற்சி நிலவுவதால் 12-ம் தேதி முதல் வரும் 15-ம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும்.

Also Read | சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு பதிவு கட்டணம் விலக்கு – தமிழக அரசு

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், டெல்டா, தரும புரி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள், காரைக்காலில் 12-ம் தேதியும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்களில் 13-ம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

14-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், வடபகுதி உள் மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும்.  கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, தென்காசி மாவட்டங்களில் கனமழை யும் பெய்யும். 15-ம் தேதி தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும்.  தென் மாவட்டங்களில் கனமழை முதல் அடைமழை பெய்யும்.

கடலோர மாவட்டங்களில் காற்றில் ஈரப்பதம் 50 முதல் 90 சதவீதம் வரை உள்ளதால், காற்றின் இயல்பான வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும். தென்மேற்கு திசையில் இருந்து காற்று வீச வாய்ப்பு உள்ளதால் கடலோரம் மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்களில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

Also Read | Chennai: ஜூஸ் பவுடரில் 2.5 கிலோ தங்கத் துகள்கள் கடத்தல் 

11-ம் தேதி காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமேசுவரம், விளாத்திகுளத்தில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தென் அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல சுழற்சியால் அரபிக் கடல் பகுதியிலும் லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளிலும் 12 மற்றும் 13-ம் தேதி களில் சூறாவளிக் காற்று 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

“14-ம் தேதி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் 14, 15-ம் தேதிகளில் சூறாவளி காற்று 60 கி.மீ. வேகத்தில் வீசும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்” என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Also Read | MDMK: ஏழு தமிழர்களை விடுதலை செய்க! வைகோ வேண்டுகோள்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News