சென்னை: கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை பெற்றுக்கொள்வதாக பெற்றோர் சம்மதம் தெரிவித்துவிட்ட்டனர். கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தில் சிலர் ஆதாயம் தேடுகின்றனர் என்று நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர். மேலும், மாணவியின் இறுதிச்சடங்கை கண்ணியமாக நடத்துங்கள் என்றும், அவரது ஆன்மா இளைப்பாறட்டும் என்று நீதிபதி, மாணவியின் பெற்றோரை கேட்டுக் கொண்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக, இன்று காலை வழக்கை விசாரித்த நீதிமன்றம், சட்டத்தின் மீதும், நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளதா இல்லையா என்ற கேள்வியை எழுப்பினார். மாணவியின் உடலை வைத்து பந்தயம் கட்டாதீர்கள் என்று கேட்டுக் கொண்ட நீதிமன்றம், பெற்றோர்கள் மீது மெட்ராஸ் நீதிமன்றம் அனுதாபம் கொள்வதாக தெரிவித்தார்.


மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி மாணவியின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறுகிறதா?


கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை, அவரது பெற்றோர்கள் எப்போது பெற்றுக் கொள்வார்கள் என்பது தொடர்பாக நண்பகல் 12 மணிக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று காவல் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், தங்கள் மகளின் சடலத்தை  நாளை பெற்றுக்கொள்வதாக பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.


கள்ளக்குறிச்சி மாணவி உடல் ஒப்படைப்பு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் பல கேள்விகளையும் கவலைகளையும் எழுப்பியது. கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக சமூக வலைதளங்கள் கண்காணிப்பு தொடர்பாக அக்கறை செலுத்த வேண்டும் என்றும், ட்விட்டர், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களை கண்காணிக்க வேண்டும் என்றும் நீதிபதி காவல்துறைக்கு அறிவுறுத்தினார். 


எஸ்.பி. பகலவன் தலைமையிலான தனிப்படை தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும், வதந்திகளை பரப்பிய சமூக வலைதள பக்கங்களை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.


மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வீட்டில் கட்டப்பட்ட பேனரால் பரபரப்பு


இதனையடுத்து, நாளைக் காலை மாணவியின் சடலத்தை பெற்றோர் பெற்றுக் கொள்வார்கள் என்பது தெளிவாகியுள்ளது. மாணவியின் இறுதிச்சடங்குகள்  நாளைக்கு நடைபெறும். இரண்டு முறை உடற்கூறாய்வுகள் நடைபெற்ற நிலையில், ஒன்பது நட்களாக பிணவறையில் இருக்கும் கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை நாளைக் காலை 7 மணிக்குள் பெற்றுக் கொள்ள நீதிமன்றம் அறிவுறுத்தியது.


மேலும், நாளை மாலை ஆறு மணிக்குள், கனியாமூர் பள்ளி மாணவியின் இறுதிச் சடங்குகளை முடித்துவிட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.


மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக வெளியான பகீர் தகவல்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ