Latest News Kalikambal Temple Priest : சென்னை விருகம்பாக்கத்தில் இளம் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்துவிட்டு விபச்சாரத்திற்கு தள்ளியதாக காளிகாம்பாள் கோவில் பூசாரி மீது பாதிக்க பட்ட பெண் புகார் அளித்த நிலையில் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பூசாரி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவை மாவட்டத்தை சேர்ந்த இளம்பென் ஒருவர் பிஇ படிப்பை முடித்துவிட்டு  தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. தனது தந்தை மற்றும் தாய் இறந்த நிலையில் வேலை தேடி சென்னை சாலிகிராமத்தில் உள்ள வால்மீகத் தெருவில் தங்கி  தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.


மேலும் சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு அடிக்கடி சென்றுள்ளார் அப்போது கோவிலில் பூசரியாக பணிபுரியும் கார்த்திக் சாமி என்ற கோவில் பூசாரி பழக்கம் அப்பெண்ணுடன் பழக்கம் ஆகியுள்ளார். கோயிலின் கூட்டம் அதிகமாக இருந்ததால் சாமி சன்னதியில் அழைத்துச் செல்வதாக கூறி அழைத்துச் சென்று அபிஷேகம் செய்துள்ளார். அதன் பிறகு தொடர்ந்து இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது நந்தினியை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் காரில் அழைத்துச் சென்றுள்ளார்.


அதன் பிறகு வீட்டுக்குள் சென்ற கார்த்திக் முனுசாமி தீர்த்தம் எனக் கூறி மயக்க மருந்து நந்தினிக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது இதனால் மயக்கம் அடைந்த நந்தினி அவர் அனுமதி இல்லாமல் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் அதன் பிறகு கர்ப்பமான நந்தினியை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கர்ப்பத்தை கலைத்துள்ளனர்.


மேலும் படிக்க | கோவையில் குடித்துவிட்டு பேருந்தை ஓட்டிய ஓட்டுனரால் விபத்து! ஷாக்கிங் வீடியோ!


அதன் பிறகு நந்தினி கார்த்திக் முனுசாமி தனது மனைவியுடன் வாழவில்லை எனக் கூறி கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர் இந்த நிலையில் விஐபி ஒருவரை நந்தினி என் வீட்டுக்கு அனுப்பி அவருடன் உறவு கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார் இதற்கு அனுமதிக்காத நந்தினியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது விஐபிக்கு ஒத்து போயிருந்தால் பணம் கிடைத்திருக்கும் எனக் கூறி வந்ததாக கூறப்படுகிறது.


கார்த்திக் முனுசாமி உடன் நந்தினி உல்லாசமாக இருந்த புகைப்படங்களை மற்றவர்களுக்கு அனுப்பி அவர்களிடமும் உல்லாசமாக இருக்க விபச்சாரத்திற்கு தள்ளி உள்ளார் என விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கார்த்திக் முனுசாமி மீது நந்தினி புகார் அளித்துள்ளார் இந்த புகாரின் பேரில் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பூசாரி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் படிக்க | செய்தியாளர்களிடம் மோசமாக நடந்து கொண்ட CSK பாதுகாவலர்கள்! Shocking Video!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ