தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சியை சேர்ந்தவர் சாம்தேவசகாயம். ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் கடந்த 15.07.14 அன்று சிலரால்  அரிவாளால் வெட்டப்பட்டு  சிகிச்சையில் இருந்தவர் 22.7.14  அன்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக கொங்கராயகுறிச்சியை சேர்ந்த வீரபாண்டியன் மகன் பிச்சையா(வயது 55) என்பவர் செயல்பட்டதாக, சாம் தேவசகாயத்தின் ஆதரவாளர்கள் கருதி உள்ளனர். இதனால் பழிக்கு பழியாக அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிச்சையாவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த மர்ம கும்பல்


கடந்த 10.03.2015 அன்று விவசாயியான பிச்சையா, அவரது மகன்கள் பாலசுப்பிரமணியன், வீரபாண்டியன் ஆகியோருடன் தோட்டத்துக்கு சென்று கொண்டு இருந்தார். அவர்கள் மூர்த்திநகர் பகுதியில் சென்று கொண்டு இருந்த போது, பிச்சையா செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்து உள்ளது. இதனால் பிச்சையா, மூர்த்தி நகர் தெருவுக்குள் சென்று உள்ளார். அப்போது அங்கு மறைந்து இருந்த மர்ம கும்பல்  பிச்சையாவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இதனை தடுக்க முயன்ற பாலசுப்பிரமணியன், வீரபாண்டியன் ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.


ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாராணை


இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து, கொங்கராயகுறிச்சியை சேர்ந்த அருளப்பன் மகன் அந்தோணிராஜ் என்ற அந்தோணி (வயது 40), தங்கராஜ் மகன் ராபின் (வயது 28), ராமசுப்பு மகன் ரவி (வயது 49), அன்பு பட்டுராஜ் என்ற பட்டுராஜ் (வயது 32), சுப்புராஜ் (வயது 46), ஜெகன்ராபர்ட் (வயது 34), விஜய் (வயது 31), முத்துப்பாண்டி (வயது 36), பார்த்திபன், செல்லப்பா (வயது 53), பிச்சாண்டி (வயது 56), செல்வராஜ் (வயது 29) மற்றும் 2  சிறுவர்கள் உள்பட மொத்தம் 14 பேரை போலீசார் கைது செய்தனர். 


மேலும் படிக்க | தேசிய சிலம்பப் போட்டியில் பதக்கம் வென்ற எண்ணூர் மாணவர்கள்!


தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் விசாரணை 


இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 2- சிறுவர்களுக்கான வழக்கு தனியாக நடந்து வருகிறது. வழக்கு விசாரணை காலத்தில், சம்பவத்தில் ஈடுபட்ட பார்த்திபன் என்பவர் இறந்து விட்டார். இதனால் 11- பேர் மீதான வழக்கு விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், குற்றம் சாட்டப்பட்ட அந்தோணிராஜ் என்ற அந்தோணி, ராபின், ரவி, அன்பு பட்டுராஜ் என்ற பட்டுராஜ் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து  தீர்ப்பு கூறினார்.
மற்ற 7 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மோகன்தாஸ் சாமுவேல் ஆஜர் ஆனார்.


மேலும் படிக்க | ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலைக்கு ஏற்பாடு: புதுவை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்ப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ