சென்னை: கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தீயாய் பரவி வந்த நிலையில், நாடு முழுவதும் தொடர்ந்து தற்போது தொற்றின் தீவிரம் குறைந்துகொண்டு வருகிறது. தமிழகத்திலும் 36,000-ஐத் தாண்டிச்சென்ற ஒரு நாள் தொற்றின் அளவு படிப்படியாக குறைந்துகொண்டிருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில், தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் முழு ஊரடங்கை நீட்டிப்பதா, அல்லது தளர்வுகளை அளிப்பதா என்பது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.


தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வெகு தீவிரமாக பரவியதை அடுத்து, மே மாதம் 10 ஆம் தெதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர், தொற்று பாதிப்பில் எந்த வீழ்ச்சியும் ஏற்படாததாலும், மக்களில் பலர் பொறுப்பற்று தெவையின்றி வீதிகளில் அலைந்ததாலும், ஊரடங்கு இன்னும் தீவிரமாக்கப்பட்டது.


மே 31 ஆம் தேதி வரை அமலில் இருந்த தளர்வுகளற்ற ஊரடங்கு, தொற்று பரவலை தடுப்பதன் பொருட்டு ஜூன் 7 ஆம் தெதி வரை நீட்டிக்கப்பட்டது. ஊரடங்கால் தமிழகத்தில் ஆக்கப்பூர்வமான விளைவுகள் காணக்கிடைத்துள்ளன.


ALSO READ: தமிழகத்தில் மேலும் 1 வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது: முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு


தமிழகத்தில் (Tamil Nadu) ஒரு நாள் தொற்று எண்ணிக்கை 36,000-ஐ கடந்து அச்சுறுத்திய நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, இது படிப்படியாக குறைந்து 25,000 என்ற அளவுக்கு வந்துள்ளது. 


தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு உள்ள போதிலும், மக்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க அரசு பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்களுக்கு தேவையாக காய்கறி, மளிகை பொருட்கள் ஆகியவை தடையின்றி கிடைக்க பலவித ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


இந்த நிலையில், ஊரடங்கை (Lockdown) இதேபோல் நீட்டித்துக்கொண்டு இருக்க முடியாது என்றும், விரைவில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். இந்த நிலையில், ஜூன் 7 ஆம் தெதி ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது இதில் சில தளர்வுகளை அறிவிப்பதா என்பது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.


சென்னையில் தொற்று எண்ணிக்கை குறைந்திருந்தாலும், கோவை, திருப்பூர் போன்ற சில மாவட்டங்களில் தொற்று எண்ணிகை அதிகரித்துள்ளன. ஆகையால் அந்தந்த மாவட்ட தொற்று நிலையை கருத்தில் கொண்டு ஊரடங்கு பற்றிய முடிவெடுக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கேற்ப ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படக்கூடும் என தெரிகிறது. 


ALSO READ: இன்றைய பாதிப்பு நிலவரம்: தமிழ்நாட்டில் 25,000க்கு கீழ் குறைந்த கொரோனா தொற்று


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR