பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்” என புத்தகம் ஒன்றுக்கு எழுதிய முன்னுரையில் இளையராஜா குறிப்பிட்டிருந்தார்.



அவரது கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்தது. ஆனால் தனது கருத்திலிருந்து பின்வாங்கப்போவதில்லை என்பதில் இளையராஜா உறுதியாக இருக்கிறார்.


மேலும் படிக்க | ’நான் பிஜேபி இல்லை’பாக்யராஜ் விளக்கம் - வீடியோ


இதற்கிடையே இளையராஜாவுக்கு ஆதரவாக பாஜகவினர் களம் இறங்கினர். மேலும், இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டுமெனவும், தேவைப்பட்டால் இதுகுறித்து டெல்லி தலைமைக்கு கடிதம் எழுத தமிழக தலைமை தயாராக இருப்பதாகவும் அண்ணாமலை கூறியிருந்தார்.



இந்நிலையில் மதுரையில் பாஜகவினர் அடித்த போஸ்டர் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மதுரை மாவட்ட பாஜக சார்பில் அடிக்கப்பட்ட அந்தப் போஸ்டரில் அம்பேத்கர், இளையராஜா, மோடி ஆகியோர் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டிருப்பதுபோல் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது.


மேலும் படிக்க | கேரளா ஆளுநர் ஆகிறார் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா?


அதுமட்டுமின்றி மதம், சாதி, மொழி கடந்து இசை நம்மை ஒன்றிணைக்கும். இசைஞானி இளையராஜாவும்கூட என்ற வாசகங்கள் இடம்பெற்றிருக்கின்றன. தற்போது இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR