மதுரை மாநகர் S.S.காலனி விவேகானந்தர் தெரு பகுதியை சேர்ந்த ராஜலட்சுமி என்பவரின் 14 வயது மகன் மதுரை கீழமாத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்துவருகிறார். நேற்று முன்தினம் மாணவன் பள்ளிக்கு ஆட்டோவில் சென்றபோது அதனை பின்தொடர்ந்து ஆம்னி காரில் வந்த கும்பல் ஒன்று ஆட்டோ ஓட்டுனரை அரிவாளால் தாக்கிவிட்டு, துப்பாக்கியை காட்டி மிரட்டி மாணவனை கண்ணை கட்டி கடத்திச் சென்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து மாணவனின் குடும்பத்தை தொடர்ப்பு கொண்ட அந்த கும்பல் 2 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என கேட்டு மிரட்டல் விடுத்து பேசியுள்ளனர். இதனையடுத்து  ராஜலட்சுமி அந்த கும்பல் குறித்தும், பணம் கேட்டு மிரட்டிய ஆடியோவுடன் S.S.காலனி நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் காசி தலைமையில் ஆட்டோ டிரைவரின் செல்போன் எண் இடத்தை அறிந்து கடத்தல் கும்பலை பின் தொடர்ந்தனர். காவல்துறையினர் தேடியதை அறிந்த கடத்தல் கும்பல் கண்ணை கட்டியபடி மாணவன் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் ஆகிய இருவரையும் செக்கானூரணி அருகே கின்னிமங்கலம் காட்டுப்பகுதிக்குள் இறக்கவிட்டு தப்பித்துள்ளனர். இதனையடுத்து கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பிய இருவரையும் காவல்துறையினர் அழைத்து வந்தனர்.


மேலும் படிக்க | புதுக்கோட்டை : என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி குடும்பத்தின் பகீர் புகார்


அவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் அளித்த தகவலின்பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வுமேற்கொண்டனர் காவல்துறையினர். இதனை தொடர்ந்து கடத்தல் கும்பலை சேர்ந்த தேனி மாவட்டம் போடியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை கைது செய்தனர். இவர் காவலராக 2020ல் தென்காசி மாவட்டம் சிவகிரியில் பணியாற்றியபோது மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டதாக டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்.


இதனைத்தொடர்ந்து தனிப்படையினர் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதில், திருநெல்வேலி மாவட்டம் ரஹ்மான்பேட்டையை சேர்ந்த அப்துல் காதர், தென்காசி மாவட்டம் சிவகிரியை சேர்ந்த வீரமணி, காளிராஜ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளிகள் பெண் உட்பட 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


நால்வரிடம் காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடத்தல் கும்பல் பொருளாதார ரீதியாக வசதி படைத்தவர்களின் பின்புலங்களை தெரிந்துகொண்டு அவர்களின் குழந்தைகளை கடத்தி பணம் கேட்டு மிரட்டிவந்துள்ளது தெரியவந்துள்ளது. அதன்படி மதுரையில் உள்ள மாணவனை பணத்திற்காக கடத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து கடத்தலுக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையின் முழுமையான விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க | கிசுகிசு : தூதுவிடும் தோழி, பழைய பாசத்தால் கரையும் மாஜிக்கள்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ