பொதுவாகவே சமூக வலைதளங்களில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வீடியோக்கள் வைரலாகும். அதில் ஒருசில மட்டும் நம்மை சற்று அதிர்ச்சியூட்டும். அப்படிப்பட்ட வீடியோ குறித்து தான் நாம் இந்த செய்தியில் பார்க்க உள்ளோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வளவன் என்பவர் தனது முகநூலில் ஒரு வீடியோவை பகிந்துள்ளார். அதில் ஒரு சாலையோர மட்டம் சூப் விற்பனை கடையில் கடைக்காரர் சூப் குடிக்க வருபவர்களுக்கு ஒரு கப்பில் சூப் ஊற்றி கொடுக்கிறார். அவர்களும் சூப்பை குடித்துவிட்டு அதில் இருக்கும் எலும்பை சப்பி சாப்பிட்டுவிட்டு அங்கேயே கீழே போட்டுவிடுகின்றனர்.


மேலும் படிக்க | லிஃப்டுக்குள் 2 மணி நேரம் சிக்கிய பயணிகள்!! திக் திக் நிமிடங்கள்!!



பிறகு அவர்கள் சென்றதும், அந்த கடைக்காரர் மீண்டும் அந்த எலும்புகளை எடுத்து கழுவி சூப்பில் போட்டுவிடுகிறார். புதிய கஸ்டமர்களுக்கு அந்த எலும்பையே கொடுக்கிறார். இந்த மாதிரியான ஒரு வீடியோவை தான் அவர் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் சென்னை காரப்பாக்கம் அரவிந்த் திரையரங்கு அருகே இந்த சூப் கடை இயங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 


மேலும் படிக்க | இறந்த தம்பியின் உருவ சிலையின் மடியில் குழந்தைகளுக்கு காதுகுத்திய அக்கா!


இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. அதே நேரம் இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்த தகவல்கள் இல்லை. இது எப்போது எடுக்கப்பட்டது என்றும் தெரியவில்லை. எது எப்படியோ சூப் பிரியர்களே கொஞ்சம் உஷாரா இருங்க.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR