சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் நிர்ணையிக்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. அதன்படி கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை (Petrol, Diesel Price) தொடர்ந்து ஊச்சத்தில் உள்ளது. இதனால், இந்தியாவில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 100 ரூபாயைக் கடந்தும் தொடர்ந்து விலையேற்றத்தை சந்தித்து வருகிறது.


ALSO READ | Saudi Arabia-UAE சர்ச்சையால் பெரும் பிரச்சனை: பெரிய ஷாக் கொடுக்குமா பெட்ரோல் விலை?


இதற்கிடையில் தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் சில தினங்களுக்கு முன் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. இதற்கிடையில் சென்னையில் கடந்த 10 நாட்களாக பெட்ரோல் லிட்டர் ரூ.98.96-க்கும், டீசல் ரூ.93.26-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.  


இந்நிலையில், 11-வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி அதேவிலை நீடித்து வருகிறது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.96-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.93.26-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


ALSO READ | இந்தியாவின் மிகச்சிறந்த மின்சார கார்கள்: இனி பெட்ரோல் விலை பற்றி கவலை வேண்டாம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR