நீண்ட நாட்களாக ரஜினி எப்படியும் அரசியலுக்கு வருவார் என்கிற நம்பிக்கையில் ஏராளமானோர் அவரது மக்கள் மன்றத்தில் இணைந்தனர். நீண்டநாள் ரசிகர்களும், சில வெளி நபர்களும் மாவட்டச் செயலாளர்களாகி, தொடர்ந்து மக்கள் தொண்டாற்றி வந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசியல் கட்சி தொடங்கி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருந்த நிலையில், அர்ஜுன மூர்த்தி, தமிழருவி மணியன் உட்பட பலரையும் முக்கிய பொறுப்புகளில் அமர்த்தினர். ஆனால் தனது உடல்நிலை காரணமாக அந்த முடிவை கைவிடுவதாக அறிவித்து, அரசியல் முடிவிலிருந்து பின் வாங்கினார் ரஜினி.



இதனால் கடும் அதிருப்திக்குள்ளான நிர்வாகிகள் பலர் திமுக, அதிமுக உள்ளிட்டா பல கட்சிகளுக்கு சென்றனர். இதில் ஏராளமானோர் திமுகவிற்கு சென்றனர். ரஜினி மன்றத்தினர் மாற்று கட்சிகளுக்கு செல்வதை அவர்கள் விருப்பம் என்று கூறிவிட்டு ஒதுங்கினார் ரஜினி.


இந்நிலையில், கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் முன்னிலையில் ரஜினி மக்கள் மன்ற முன்னாள் மாவட்ட துணை செயலாளர் ஆர். எஸ்.ராஜன்அவர்களுடன் ஏராளமான ரசிகர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.  மேலும், மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், மகேஷ் லாசர், நவீன்,காலபெருமாள், எனல் ராஜ், ஜோர்தான், சேகர்,ஜோயல், சந்தோஷ் உள்பட ஏராளமான ரசிகர்களும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.



ALSO READ அண்ணாத்த போஸ்டருக்கு ரத்த அபிஷேகம்; ரஜினிகாந்த் ஆதரவா? டிஜிபியிடம் புகார்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR