ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை கொலை செய்துவிட்டு ரவுடி மதன் இறந்தவரின் சடலத்துடன் செல்பி எடுத்து நண்பர்களுக்கு ஷேர் செய்த கொடூரம் சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை, மணலி புது நகரில் ஆட்டோ டிரைவர் ரவிசந்திரன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வாழ்ந்து வந்தார். கடந்த 27ம் தேதி அன்று ரவிசந்திரன் வீட்டில் இருந்து தனது நண்பர்களுடன் வெளியில் சென்றுள்ளார். வெகு  நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அவரின் மனைவி மற்றும் உறவினர்கள் பல இடங்களில் அவரை தேடிய அலைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு  எம்.ஆர்.எப் காலி மைதானத்தில் பலத்த காயங்களுடன் சடலம் ஒன்று இருப்பதாக மணலி புது நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 


மேலும் படிக்க: பெட்ரோல் விலை உயர்வால் அதிகரிக்கும் பெட்ரோல் திருட்டு! வைரல் வீடியோ!


இதனை அடுத்து அங்கு சென்ற அவர்கள் தலை சிதைந்த நிலையில் இருந்த உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில்,  அவர் ஆட்டோ ஓட்டுநர் ரவிசந்திரன் என்பது தெரியவந்தது. நண்பர்களுடன் மது விருந்துக்கு சென்ற போது ஏற்பட்ட மோதலில் ரவிசந்திரன் கொல்லப்பட்டதும் தெரியவந்தது.


அம்பத்தூர் உதவி கமிஷனர் கனகராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர் கொடி ராஜ் தலைமையிலான போலீசார் பழைய நாப்பாளையம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த கார் டிரைவர் மதன் குமார் என்பவரை கைது விசாரித்தனர். மதன் கொடுத்த தகவலின்பேரில் குட்டா (எ) ஜெயப்பிரகாஷ், தனுஷ் , பரத் ஆகியோரை கைது செய்தனர்.



கைது செய்தவர்களிடம் நடத்திய விசாரணையில் ரவுடி மதன் சில நாட்களுக்கு முன்பு போதையில் இருந்த போது ஆட்டோ டிரைவர் ரவிச்சந்திரனுடன் தகராறு ஏற்பட்டதாக கூறியுள்ளார். 


இதனால் பகையுடன் இருந்த மதன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ரவிச்சந்திரனை கொல்லை திட்டமிட்டுள்ளார். அதன்படி நேற்று முன் தினம் மதியம் மதன் தனது கூட்டாளிகளான குட்டா (எ) ஜெயப்பிரகாஷ், பரத், பப்லு (எ) தனுஷ் ஆகியோருடன் சேர்ந்து ரவிச்சந்திரன் வீட்டுக்கு சென்று சண்டையை மறந்து சமாதானம் பேசலாம் என ரவிச்சந்திரனை அழைத்துள்ளனர். அப்போது அவரின் மனைவி கீர்த்தனா போக வேண்டாம் என்று கணவனை தடுத்துள்ளார். ஆனால் ரவிச்சந்திரனோ சமாதானம் செய்ய தானே போகிறேன் வந்து விடுகிறேன் என்று கூறி பைக்கில் சென்றுள்ளார்.


மேலும் படிக்க: ஸ்விக்கி மேலாளரை தாக்கும் முன்னாள் ஊழியர்கள்: சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு


அனைவரும் மணலி புதுநகர் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்று, ரவிச்சந்திரனுடன் சமாதானமாக பேசுவது போல் நடித்த மதன் மற்றும் அவனது கூட்டாளிகள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் திடீரென ரவிச்சந்திரனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ரவிச்சந்திரன் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அங்கிருந்த கல்லை எடுத்து அவரது தலையில் போட்டு முகத்தை சிதைத்து கொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர்.


பின்னர் ரவிச்சந்திரன் சடலத்துடன் மதன் தனது செல்போனில் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியதும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் மீது ஏற்கனவே கொலை முயற்சி, அடிதடி போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். கொலை செய்து விட்டு சடலத்துடன் செல்பி எடுத்த சம்பவம் மணலி புது நகரில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR