சென்னை: உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா பெருந்தொற்று காரணமாக உலக மக்கள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். மக்களின் அன்றாட வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்திலும் (Tamil Nadu) பெருந்தொற்று காரணமாக பொது மக்களின் வாழ்க்கையில் பல வித மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பலரது வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பலர் தங்கள் தொழிலில் கடும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளனர். பலருக்கு வேலை போய்விட்டது. இந்த நிலையில், அன்றாட வாழ்க்கையின் பல அத்தியாவசிய செலவுகளை கூட செய்ய முடியாமல் பலர் தவித்து வருகின்றனர்.


கல்வி என்பது மாணவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான ஒரு முக்கிய விஷயமாகும். எனினும், சில பள்ளிகள் கட்டணம் என்னும் பெயரில் இந்த கொரோனா காலத்திலும் பெற்றோர்களுக்கு அழுத்தம் அளித்து வருகின்றன. இது குறித்த பல குற்றச்சாட்டுகள் எழவே, இதற்கான ஒரு அறிவுறுத்தலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


நூறு சதவிகிதம் கட்டாய கட்டணம் வசூல் செய்யும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி (Anbil Mahesh Poyyamozhi) கூறியுள்ளார். 


தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சியில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டார். 


இதில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில், நான்கு நாட்களில் 1,500 மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார். நூறு சதவிகிதம் கட்டாய கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் தொடர்ந்து பல தனியார் பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் அன்பில் மகேஷ் எச்சரித்துள்ளார்.


ALSO READ: Class 12 Exams: மதிப்பெண் கணக்கீடு குறித்த விவரங்களை வெளியிட்டது தமிழக அரசு


இது தவிர, திருச்சி தெற்கு மாவட்டக் கழக அலுவலகத்தில், கொரோனாத் தொற்றினால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் அரிசி மூட்டைகளையும் அன்பில் மகேஷ் இன்று வழங்கினார். 



கொரோனா பெருந்தொற்றால் வாழ்வாதாரம் இழந்த பலர், தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கை குறிப்பிட்டு சொல்லக்கூடிய அளவிற்கு அதிகரித்துள்ளது.


முன்னதாக, 26 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு (Class 12 Students) மாணவர்களின் பொதுத் தேர்வு மதிப்பெண் மதிப்பீடு குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர் சந்திப்பில் பேசினார். 12 ஆம் வகுப்புக்கான மதிப்பெண் கணக்கீடு குறித்த சுமார் 12 வழிமுறைகள் பரிசீலிக்கப்பட்டதாகவும், அவற்றில் இரண்டு வழிமுறைகள் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், இறுதியாக தற்போது வெளிவந்த முறையை நிபுணர் குழு முடிவு செய்ததாகவும் அமைச்சர் கூறினார்.


பத்தாம் வகுப்பில் மாணவர்கள் தேர்வு எழுதிய போது, சூழல் சாதாரணமாக இருந்தது. வழக்கமான ஆரோக்கியமான சூழலில் மாணவர்கள் தேர்வை எழுத முடிந்தது. ஆகையால் 10 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கு அதிக பங்கு (50%) அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். பத்தாம் வகுப்பு மதிப்பெண்களில் எந்த பாடங்களில் மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளார்களோ, அந்த மூன்று பாடங்களுக்கான மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றார் அன்பில் மகேஷ்.


ALSO READ: Tamil Nadu: 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR