கொரோனா தொற்றின் இரண்டாவது அலை (Corona Second Wave) மெல்ல மெல்ல குறைந்துகொண்டு வருகிறது. மிக அதிகமாக இருந்த ஒரு நாள் தொற்றின் அளவு தமிழகத்தில் (Tamil Nadu) தற்போது படிப்படியாக வீழ்ச்சியடையத் தொடங்கி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் (Tamil Nadu) கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு (Lockdown) கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. நோய்த்தொற்று கட்டுப்படுவதைப் பொறுத்து அவ்வப்போது அரசு தளர்வுகளையும் அறிவித்து வருகிறது. கடந்த மாதம் 28 ஆம் தேதி ஊரடங்கு கட்டுப்பாடுகளில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி நோய்த்தொற்று சதவீதத்தின் அடிப்படையில் 3 வகைகளாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன.


ALSO READ | COVID-19 Update: தமிழகத்தில் 4,481 பேர் பாதிப்பு, 102 பேர் உயிர் இழப்பு


வகை 1-ல் வரும் 11 மாவட்டங்களில் முன்பு அளிக்கப்பட்டதை விட அதிக சலுகைகள் வழங்கப்பட்டன:


- தேநீர் கடைகள் (எடுத்துச்செல்ல மட்டும்) காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதி உண்டு.
- ஹார்ட்வேர், புத்தக கடைகள் காலை 7 மணி முதல் மாலை 7 வரை இயங்க அனுமதி.
- பாத்திர கடைகள், ஃபான்சி பொருட்களுக்கான கடைகளுக்கு காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதி
- அரசின் அத்தியாவசிய துறைகள் 100%, மற்ற துறைகள் 50% ஊழியர்களுடன் இயங்க அனுமதி
- தனியார் நிறுவனங்கள், வங்கி, காப்பீட்டு நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் செயல்படலாம்
- இதர தொழிற்சாலைகள் 33%, ஐ.டி. நிறுவனங்கள் 20% பணியாளர்களுடன் செயல்படலாம்
- கட்டுமான நிறுவனங்கள் 33% ஊழியர்களுடன் செயல்படலாம்
- அழகு நிலையங்கள், குளிர்சாதன வசதியின்று 50% வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம்
- பள்ளி, கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான பணிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- இனிப்பு, கார வகைகளை விற்கும் கடைகள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்கலாம்
- திரையரங்குகளில் வட்டாட்சியர் அனுமதி பெற்று வாரம் ஒரு நாள் பராபரிப்பி பணிகள் செய்யலாம்


ALSO READ | COVISHIELD VACCINE: புனேவில் இருந்து 4 லட்சம் தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வந்தது


வகை 2-ல் உள்ள அரியலூர், கடலூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட 23 மாவட்டங்களுக்கான தளர்வுகள்:


- பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- தனியார், பாதுகாப்பு சேவை அலுவலங்கள் இ-பதிவு செய்யாமல் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- உடற்பயிற்சி மையங்கள், யோகா மையங்கள் 50% திரனில் இயங்கலாம்.
- சாலையோர உணவுக் கடைகள், பார்சல் சேவை காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்கலாம்.
- செல்பெசி மற்றும் அது சார்ந்த கடைகள் காலை 9 முதல் மாலை 7 மணி வரை இயங்கலாம்.
- கட்டுமானப் பணிகளை 50% ஊழியர்களுடன் மேற்கொள்ளலாம்.


வகை 3-ல் உள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கான தளர்வுகள் வழங்கப்பட்டது:


- அனைத்து தனியார் நிறுவனங்களும் 100% ஊழியர்களுடன் இயங்கலாம்.
- தீப்பெட்டி தொழிற்சாலைகள் 100% ஊழியர்களுடன் செயல்படலாம்.
- ஜவுளிக் கடைகள் குளிர்சாதன வசதியின்றி காலை 9 மனி முதல் மாலை 7 மணி வரை 50% வாடிக்கையாளர்களுடன் இயங்கலாம். 
- மத வழிபாட்டுத் தலங்கள் செயல்பட அனுமதி
- வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் பார்சல் சேவைகளுக்கு அனுமதி.
- வணிக வளாகங்கள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படலாம்.
- தனியார், பாதுகாப்பு சேவை அலுவலங்கள் இ-பதிவு செய்யாமல் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- உடற்பயிற்சி மையங்கள், யோகா மையங்கள் 50% நபர்களுடன் இயங்கலாம்.


இந்த ஊரடங்கு வரும் 5-ம் தேதி முடிவடையுள்ள நிலையில், ஊரடங்கு தளர்வுகள் குறித்து இன்று காலை 11 மணிக்கு சென்னை கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ வல்லுனர் குழுவினருடன் ஆலோசனை நடத்துகிறார். மேலும் ஊரடங்கு நீட்டிக்கலாமா என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் (TN CM MK Stalin) ஆலோசனை நடத்துகிறார். 


இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தரவுகளின் அடிப்படையில், ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் தொடர்பாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


ALSO READ | FrontLine Workers: முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, தமிழக அரசு அறிவிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR