இந்தியா முழுவதும் அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸின் 3வது அலை பாதிப்பு, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. நேற்று 26 ஆயிரத்து 533 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த எண்ணிக்கை இன்று சற்று குறைந்து 24,418 ஆக பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த ஒருவாரத்துடன் ஒப்பிடுகையில் பாதிப்பு எண்ணிகை ஏறத்தாழ 5 ஆயிரம் குறைந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | வவ்வால் மூலம் பரவ கூடிய வைரசால் பாதிப்பு அதிகமாக இருக்கும் - மா.சுப்பிரமணியன்!


இதன்மூலம் தொடர்ந்து 6வது நாளாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. குறிப்பாக, இன்று கொரோனா வைரஸ் பாதித்தவர்களைவிட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதன்படி, இன்று ஒரே நாளில் 27 ஆயிரத்து 885 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 57 ஆயிரத்து 846-ஆக அதிகரித்துள்ளது.


ALSO READ | மீண்டும் லாக்-டவுன் வருமா! அரசு சொல்வது என்ன?


அதேநேரத்தில் இணைநோய்களுடன் கொரோனா வைரஸூக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 46 பேர் உயிரிழந்துள்ளனர். இன்றைய இறப்பு எண்ணிக்கையுடன் சேர்த்து இதுவரை கொரோனா தொற்றுக்கு தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிகை 37,506 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளரும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாக தெரிவித்தார். 4 மாவட்டங்களில் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக கூறிய அவர், விரைவில் அந்த மாவட்டங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை குறையும் என நம்பிக்கை தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR