ராமநாதபுரம் அடுத்த ஆர்.காவனூர் பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியம். கணவரை பிரிந்தவரான இவர் தனது தாய் வீட்டில் மகளுடன் வசித்து வந்தார். அப்போது இடையர் வலசையைச் சேர்ந்த முருகானந்தம் என்பவருடன் பாக்கியத்திற்குப் பழக்கம் ஏற்பட்டது, நாளடைவில் அது திருமணத்தை மீறிய தகாத உறவாக உருவெடுத்தது. இதற்கிடையே, இருவரின் பழக்கமும் பாக்கியத்தின் தந்தை ரவிக்கு தெரியவந்தது. இருவரையும் கடுமையாக கண்டித்திருக்கிறார். இருந்தும் அவர்களது தகாத உறவு தொடர்ந்து நீடித்து வந்துள்ளது. இந்நிலையில், ஒரு கட்டத்தில் தனது காதலுக்கு தந்தை இடையூறாக இருப்பதால் ஆத்திரமடைந்த பாக்கியம் கொலை செய்யும் அளவுக்குத் துணிந்திருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | இறந்த தம்பியின் உருவ சிலையின் மடியில் குழந்தைகளுக்கு காதுகுத்திய அக்கா!


ரகசிய காதலனின் உதவியோடு நடு இரவில் மது போதையில் இருந்த ரவி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தியதாகக் கூறப்படுகிறது. இதில், 80சதவீதத்திற்கு மேல் தீக்காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ரவி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ரவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் கொடுத்த புகாரால் பாக்கியம் போலீசில் வசமாகச் சிக்கினார்.


 



மேலும் படிக்க | மனைவியின் தற்கொலைக்கு காரணமானவரை கழுத்தறுத்துக் கொன்ற கணவன்!


இதைத்தொடர்ந்து, பாக்கியம் மற்றும் அவரது கள்ளக்காதலன் முருகானந்தம் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருமணத்தை மீறிய உறவுக்காக பெற்ற தந்தையையே பெட்ரோல் ஊற்றி எரிந்த மகளின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR