இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்திற்கு வெளிமாவட்டம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் தருகின்றனர். இதையடுத்து, பள்ளி காலாண்டு தேர்வுகள் முடிந்து நவராத்திரி விழா, ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையைப் போன்ற தொடர் விடுமுறை ஒட்டி இராமேஸ்வரத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பள்ளி விடுமுறையை முன்னிட்டு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் ராமேஸ்வரத்தில் இராமநாதசாமி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு தனுஷ்கோடி, பாம்பன் பாலம், உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு செல்வது வழக்கம்.


மேலும் படிக்க | ஓசி பயணம்... வழக்கை வாபஸ் வாங்காவிட்டால் போராட்டம் - எச்சரிக்கும் வேலுமணி


இந்நிலையில், தனுஷ்கோடியின் அழகை ரசிக்க அரிச்சல்முனை பகுதியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். அலையின் சீற்றத்தைப் பொருட்படுத்தாமல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடலில் குளித்து விளையாடுகின்றனர்.


இங்கு அடிக்கடி அடையாளம் தெரியாத நிலையில் மனித உடல் அழுகிய நிலையில் கரை ஒதுங்கி வரும் நிலையில் . பல வருடங்களாக இப்பகுதியில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் காணாமல் போவதும் சில நாட்களுக்குப் பிறகு அடையாளம் தெரியாமல் கரை ஒதுங்குவதும் வழக்கமாக உள்ளது. மீனவர்களே நீந்த முடியாத ஆபத்தான கடல் பகுதியானது இந்த அரிச்சல்முனை கடல், குளிப்பதற்குத் தடைசெய்யப்பட்ட பகுதி என்று பல பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஆபத்தை உணராமல் தடையைமீறி குடும்பத்துடன் குளிக்கின்றனர்.


இதுவரையில் தடையை மீறி குளித்த ஏராளமானோர் கடலில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர். விடுமுறை நாட்களில் கூடுதல் காவல் துறையினர் அமர்த்தி தடையை மீறி குளிக்கும் சுற்றுலாப் பயணிகளை காவல்துறையினர் கண்காணித்து அவர்களை அப்புறப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளது.


தனுஷ்கோடியில் கடல் சீற்றம்: சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தென் மேற்கு பருவமழை விரைவில் விடை பெற உள்ளது. இந்நிலையில், ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடல் சீற்றம் ஏற்படும் என சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தனுஸ்கோடி  தெற்கு கடற்கரை பகுதி வழக்கத்திற்கு மாறாக சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது.


தனுஷ்கோடி தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள கடலி சீற்றம் காரணமாக முகுந்தராயர் சத்திரத்தில்; மீன்வளத்துறையால் கடலில் கட்டப்பட்டுள்ள மீன்பிடி துறைமுகத்தில் உள்ள தடுப்பு சுவற்றில்  கடல் அலைகள் மோதி 4 முதல் 5 அடி உயரம் வரை உயர்ந்து வருகிறது.


கடல் சீற்றத்தால் முகுந்தராயர் சத்திரத்தில் கட்டப்பட்டுள்ள மீன்பிடி துறைமுகத்தில் உள்ள தடுப்பில் அலைகள் மோதி ராட்சத அலைகளாக எழுப்புவதால்  ஆபத்தை உணராமல் தனுஸ்கோடி வந்துள்ள சுற்றுலா பயணிகள்  கடல் அலைகளுடன்  செல்பி எடுக்க முயல்வதால் மீன்பிடி இறங்கு தளைத்தை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மரைன் போலீசார் தடுப்பு வைத்து அடைத்துள்ளனர்.


இதனிடையே நேற்று நள்ளிரவு வீசிய சூறைக்காற்று காரணமாக  பாம்பன் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கபட்டிருந்த  நாட்டுப்படகு ஒன்று கரை ஒதுங்கி தரை தட்டி சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | காந்தி ஜெயந்தி : 1.85 லட்ச மரக்கன்றுகளை நட்ட விவசாயிகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ