காந்தி ஜெயந்தி : 1.85 லட்ச மரக்கன்றுகளை நட்ட விவசாயிகள்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில், தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் 1.85 லட்சம் மரக்கன்றுகளை நட்டனர்.  

Written by - Sudharsan G | Last Updated : Oct 2, 2022, 10:04 PM IST
  • மரக்கன்றுகள் ஈஷா நாற்று பண்ணைகள் மூலம் 3 ரூபாய்க்கு விற்பனை.
  • இதுவரை தமிழ்நாடு, கர்நாடகாவில் 2.5 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டன.
  • கடந்தாண்டு இதேபோன்று சுமார் 2 லட்சம் மரக்கன்றுகள் காந்தி ஜெயந்தி அன்று நடப்பட்டன.
காந்தி ஜெயந்தி : 1.85 லட்ச மரக்கன்றுகளை நட்ட விவசாயிகள் title=

மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 1 லட்சத்து 85 ஆயிரம் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்தனர். சத்குருவால் தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் இயக்கம், மரம் சார்ந்த விவசாய முறையை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. 

தமிழ்நாடு முழுவதும் உள்ள 40 ஈஷா நாற்று பண்ணைகள் மூலம் தரமான டிம்பர் மரக்கன்றுகள் 3 ரூபாய்க்கு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும் காவேரி கூக்குரல் பணியாளர்கள் விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை அவர்களின் நிலங்களுக்கே நேரில் சென்று இலவசமாக வழங்கி வருகின்றனர். 

மேலும் படிக்க | 'வாவ்...' குப்பையில் கோடியை அள்ளும் இந்தூர் - தூய்மையான நகரம் விருதை வென்றது இப்படிதான்!

Isha, ஈஷா

இந்நிலையில், கிராமப்புற வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளித்த மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் பணியை இந்த இயக்கம் மேற்கொண்டது. அதன்படி, மொத்தம் 37 மாவட்டங்களில் சுமார் 600 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்களில் 1.85 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதில் சுமார் 1000 விவசாயிகள் பங்கேற்று, கடந்த செப். 29ஆம் தேதி முதல் மரக்கன்றுகள் நடும் பணியை மேற்கொண்டனர். 

விவசாயிகளின் பொருளாதார தேவை மற்றும் அவர்களின் மண் மற்றும் நீரின் தன்மைக்கு ஏற்ப தேக்கு, மலைவேம்பு, கருமருது, வேங்கை, மஞ்சள் கடம்பு, சந்தனம், செஞ்சந்தனம், குமிழ், மகாகனி போன்ற பல்வேறு டிம்பர் மரங்களை வரப்பு ஓரமாகவும், தொகுப்பு மரங்களாகவும் நடவு செய்துள்ளனர்.

Isha, ஈஷா

காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இதுவரை 2.5 கோடி மரக்கன்றுகள் விவசாயிகள் மூலம் நடப்பட்டுள்ளன. மேலும், கடந்தாண்டு காந்தி ஜெயந்தியின் போது இதே போல் சுமார் 2 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் நடவு செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | அண்ணல் காந்தியின் 154வது பிறந்தநாள் அனுசரிப்பு! ராட்டை தினத்தன்று இந்தியாவின் அஞ்சலி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News