ஓசி பயணம்... வழக்கை வாபஸ் வாங்காவிட்டால் போராட்டம் - எச்சரிக்கும் வேலுமணி

ஓசி பேருந்து பயணம் வேண்டாம் என்ற வீடியோ தொடர்பாக அதிமுக தொண்டர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை வாபஸ் பெறாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என எஸ்.பி.வேலுமணி எச்சரித்துள்ளார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Oct 2, 2022, 07:43 PM IST
  • ஓசி பயணம் என்று பொன்முடி பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது
  • கோவையை சேர்ந்த மூதாட்டி ஓசி பயணம் வேண்டாமென வாக்குவாதம்
  • அதிமுக் தொண்டர் மீது வழக்குப்பதிவு
ஓசி பயணம்... வழக்கை வாபஸ் வாங்காவிட்டால் போராட்டம் - எச்சரிக்கும் வேலுமணி title=

அமைச்சர் பொன்முடி விழா ஒன்றில் பேசுகையில், “ஓசி பஸ்லதானே போறீங்க” என பேசியது தமிழ்நாடு முழுவதும் விவாதத்தை கிளப்பியது. இதனையடுத்து கோவையில் மூதாட்டி ஒருவர் பேருந்து நடத்துனரிடம், எனக்கு ஓசி பயணம் வேண்டாம் என கூறி பணம் கொடுத்து டிக்கெட் பெறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால் அந்த  மூதாட்டிக்கு பணம் கொடுத்து அதிமுக ஐடி விங்கை சேர்ந்த பிருத்விராஜ் என்பவர் இந்த வீடியோவை எடுத்திருக்கிறார் என பேச்சு எழுந்தது.

தொடர்ந்து அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் பிருத்விராஜ் மீது பதியப்பட்டிருக்கும் வழக்கை வாபஸ் வாங்காவிட்டால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தப்படுமென்று முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் கொறடாவுமான எஸ்.பி. வேலுமணி கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் சாதாரண நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளை பார்த்து அமைச்சர் க.பொன்முடி, 'ஓசி பஸ்ல போறீங்க' என்று இழிவுபடுத்தும் விதமாக பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெண்களை இழிவுபடுத்தி அவர் பேசியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. 

Tamilnadu

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து கண்ணமநாயக்கனூர் செல்லும் பேருந்தில் பயணம் செய்ய மதுக்கரை மார்கெட் பகுதியில் பேருந்தில் ஏறிய ஒரு வயதான பெண்மணி நடத்துனரிடம் டிக்கெட் கேட்டு கட்டணம் கொடுத்துள்ளார். நடத்துனர் பணம் வேண்டாம் என மறுத்துள்ளார். அதற்கு அந்த வயதான பெண்மணி, எனக்கு ஒசிப் பயணம் வேண்டாம் என கூறி பயணித்த நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிகழ்விற்கு அதிமுகவின் தொண்டர்கள்தான் காரணம் என்று ஆர்.பிருத்திவிராஜ் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அரசின் கைபாவையாக ஒருதலைபட்சமாக காவல்துறை செயல்பட்டு வருகிறது. தற்போது காவல்துறையினர் அதிமுக தொண்டர் பிருத்திவிராஜ் மீது பதிவு செய்த பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மேற்கு மண்டல ஐ.ஜி., அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் ஜனநாயக ரீதியாக முற்றுகை போராட்டம் நடைபெறும். 

மேலும் படிக்க | அதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதுதான் திமுக சாதனை - ரவி விமர்சனம்!

ஓசி பஸ் பயணம் என ஏளனம் செய்த அமைச்சரின் பேச்சை கண்டிப்பதை விடுத்து தமிழக மக்களுக்காக குரல் கொடுக்கும் அதிமுக தொண்டர்கள் மீது வழக்கு பதிவு செய்ததை வாபஸ் வாங்க வேண்டும். கண்ணியமிக்க காவல்துறையை, சட்டம், ஒழுங்கு மற்றும் பொது மக்களின் பாதுகாப்பிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பயன்படுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News