சென்னை :கடந்த ஆண்டிலிருந்து கொரோனா தொற்று மக்களை கடுமையாக பாதித்து வருகிறது.  அதிவேக கொரோனா பரவலின் காரணமாக பல தொழில்கள் முடங்கியது.  இந்த தொற்றின் பரவலை தடுக்க பல்வேறு நாடும், பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  அந்தவகையில் கொரோனாவை தடுக்க முக்கியமான கருவியாக செயல்பட்டது தடுப்பூசி தான்.  இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பலரும் தடுப்பூசியினை செலுத்திவிட்டனர்.  இருப்பினும் சிலர் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளவில்லை, அதனால் தமிழக அரசு அதிரடியான சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ 48 மணி நேரத்திற்கான அவசர சிகிச்சை செலவை அரசே ஏற்கும் - மு.க.ஸ்டாலின்!


அதாவது கொரோனா பரவலை முற்றிலும் ஒழிக்க தடுப்பூசி போட்டவர்களை மட்டுமே பொது வெளியில் நடமாட அனுமதிக்க வேண்டும் என்றும், தடுப்பூசி போடாதவர்களை அனுமதிக்கக்கூடாது என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு குறித்து பொது சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், அனைத்து மாவட்ட பொது சுகாதாரத் துறை இயக்குனர்கள் மற்றும் சென்னை மாநகர சுகாதார அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.


அந்த அறிக்கையில், தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939-ன் படி கொரோனா தொற்று பெருந்தொற்றாக,  கடந்த ஆண்டு மார்ச் 13-ம் தேதியன்று அறிவிக்கப்பட்டது.  அதனை அடுத்து இந்த பெருந்தொற்றை தடுக்க தொற்றுநோய்கள் சட்டம் 1897-ன் படி பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வழங்கியது.  அந்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி பொதுமக்கள் சரியாக முக கவசம் அணிந்து உள்ளார்களா, சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்களா, கிருமி நாசினிகளை கொண்டு கைகளை சுத்தம் செய்கிறார்களா, என்பதை உறுதி செய்ய வேண்டும்.  பொதுமக்களின் நலனை காக்கும் பொருட்டு அவர்களின் சுகாதாரத்தை காக்க, தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939-ன் படி உள்ளூர் அதிகாரிகள் இவற்றைக் கண்காணித்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் இந்த நோய் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவாமல் இருக்க தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939-ன் படி நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களை பொதுவெளியில் நடமாட அனுமதிக்கக் கூடாது.  இந்த சட்டத்தின்படி தெருக்கள், பொழுதுபோக்கு இடங்கள், மார்க்கெட்டுகள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பொது இடம், பொதுக்கூட்டம் நடக்கும் இடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள், உணவகம் போன்றவற்றில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அனுமதி இல்லை.


இந்த சட்டத்தை கட்டாயமாக நடைமுறைப்படுத்த பொது சுகாதாரத் துறை அதிகாரிக்கு முழு உரிமையும் உள்ளது. மேலும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் தடுப்பூசி செலுத்தாதவர்களை அனுமதிக்கக்கூடாது என்று அறிவுறுத்த வேண்டும்.  அதுமட்டுமல்லாது நிறுவனங்கள், உணவகங்கள், விடுதிகள் போன்றவற்றில் பணிபுரியும் தொழிலாளர்கள் தடுப்பூசி செலுத்திவிட்டனரா ? என்பதையும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.


ALSO READ 25-ம் தேதி முதல் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைப்பு - ரயில்வே அறிவிப்பு!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR