இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் (Imran Khan) கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். சுகாதார விஷயங்களில் பாகிஸ்தான் பிரதமரின் சிறப்பு உதவியாளர் பைசல் சுல்தான் இதை அறிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இம்ரான் கான் தன்னை தனிமைப்படுத்தியுள்ளார். இம்ரான் கான் (Imran Khan) வியாழக்கிழமை சீனாவின் (China) கொரோனா வைரஸ் (Corona vaccine) தடுப்பூசியை அறிமுகப்படுத்தியிருந்தார். தடுப்பூசியைப் பயன்படுத்திய பிறகும், இம்ரான் கான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார்.


 



 


ALSO READ | Oxford-AstraZeneca கோவிட் தடுப்பூசிகள் பாதுகாப்பானதா.. எய்ம்ஸ் தலைவர் கூறுவது என்ன..!!!


இம்ரான் கான் தற்போது அவரது இல்லத்தில் உள்ளார், மருத்துவர்கள்  அவரது உடல்நிலை குறித்து பரிசோதித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் (Coronavirus) தடுப்பூசியை இம்ரான் கான் பயன்படுத்திய நாளில், இந்த தொற்றுநோயின் அறிகுறிகள் அவரிடம் காணப்பட்டன என்று கூறப்படுகிறது. இதற்குப் பிறகும், தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வதற்குப் பதிலாக, கொரோனா தடுப்பூசி பயன்படுத்தப்பட்டது.


 



 


பாகிஸ்தானில் (Pakistan) கொரோனா வைரஸின் வேகத்தை கண்டு பயந்த பிரதமர் இம்ரான் கான் வியாழக்கிழமை கொரோனா தடுப்பூசியின் முதல் அளவை எடுத்துக்கொண்டார்.


பாகிஸ்தானில் அரசாங்கத்தின் அலட்சியம் காரணமாக கொரோனா பரவியது?
பாகிஸ்தானில் கொரோனா வைரஸின் வேகம் அதிகரித்து வருகிறது. இதற்க்கு இம்ரான் அரசாங்கத்தின் அலட்சியமும் ஒருவித  காரணமாகும், கொரோனா வைரஸ் தொற்று குறித்து மக்களிடையே விழிப்புணர்வு அங்கு மிகவும் குறைவு. சந்தைகள் மற்றும் மசூதிகளில் மக்கள் ஒவ்வொரு நாளும் அதிக அளவில் திரண்டு வருகின்றனர். இதற்கிடையில், சமூக விலகல் மற்றும் முகமூடிகளின் விதிகள் அங்கு பின்பற்றவில்லை.


ALSO READ | X-ray கொடுத்த ஷாக்... பிறப்பில் தான் ஆண் என்பதை அறிந்த மணமான பெண் அதிர்ச்சி..!!


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR