World News In Tamil: அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தின் வில்மிங்டன் நகரில் இருக்கும் பள்ளி ஒன்றின் முன்னாள் ஆசிரியர், முன்னாள் மாணவர் ஒருவருக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பியதாக குற்றம் நிரூபணமாகி உள்ளது. பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பெண் ஆசிரியர் தான் இந்த மோசமான செயலில் ஈடுபட்டிருக்கிறார். நியூ கேஸ்டில் கவுண்டி போலீசாரால் கடந்த வியாழக்கிழமை (ஜூலை 18) அன்று அந்த பெண் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அந்த ஆசிரியரின் பெயர் அலனிஸ் பினியன். அவரின் வயது 24 ஆகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெண் ஆசிரியர் கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து போலீசார் ஊடகத்திடம் கூறுகையில்,"ஸ்னாப்சாட் செயலி மூலமாக அலனிஸ் அவரின் மாணவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். ஸ்னாப்சாட்டில் அவரின் மாணவர்களுள் ஒருவருக்கு, ஏற்கத்தகாத ஆபாச புகைப்படங்களை அலனிஸ் அனுப்பியிருக்கிறார்" என்றனர்.


சிறையில் பெண் ஆசிரியர்


தற்போது கைது செய்யப்பட்ட அலனிஸ் பினியன் ஒரு சிறுவனின் நலனுக்கு உந்தகம் விளைவித்ததாகவும், தவறான பழக்கத்தை தூண்டியதாகவும் கூறி, சிறுவனிடம் பாலியல் அத்துமீறல் செயலில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு பிணை வழங்க நீதிமன்றம் 46 ஆயிரம் அமெரிக்க டாலர் அபாரதம் விதித்திருந்தது, அதனை கட்டத் தவறியதால் அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 


மேலும், அவர் அந்த பள்ளியில் பயிற்சி பெற்று வரும் ஒப்பந்த ஆசிரியர் என்றும் அவருக்கும் பள்ளிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பள்ளி நிர்வாகம்,"கடந்த வாரம் காவல் நிலையத்தில் இருந்து பள்ளியை தொடர்புகொண்டு, முன்னாள் மாணவர் ஒருவருக்கு டிஜிட்டல் ரீதியாக ஆபாசப் புகைப்படம் அனுப்பியதாக புகார் வந்திருப்பதாகவும் அதை தொடர்ந்து அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருப்பதாகவும் தெரிவித்தனர்" என தெரிவித்தது.


மேலும் படிக்க | 11 வயது மாணவனுடன் முறையற்ற உறவு... ஆசிரியையின் அத்துமீறிய செயல்!


வேறு மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனரா...?


மேலும், அந்த ஒப்பந்த ஆசிரியர் குறித்து அனைத்து பின்னணி விவரங்களும் சரிபார்க்கப்பட்டு அதற்கு பின்னர்தான் பணி வழங்கப்பட்டது எனவும் பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. பள்ளி நிர்வாகம் போலீசார் விசாரணைக்கு ஒத்துழைக்கும் என்றும் தெரிவித்தது. மேலும், பெற்றோர்களுடன் இணைந்து குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதையே அடிப்படையாக கொண்டு இப்பள்ளி இயங்குவதாக நிர்வாகம் விளக்கம் தெரிவித்துள்ளது. 


தற்போது அந்த பெண் ஆசிரியர் மீது ஒரு மாணவர் தரப்பில் இருந்தே புகார் வந்துள்ளது. அவரால் வேறு மாணவர்கள் யாரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்று போலீசார் தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் புகார் அளிக்க தயக்கம் காட்டவும் வாய்ப்பிருப்பதால், அச்சமின்றி இதுகுறித்து போலீசாரை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் உலகம் முழுவதுமே நடைபெற்று வருகிறது. இதுபோன்று பெண் ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறுவது தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த மாதம், அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியை சேர்ந்த சிறப்பு கல்வி ஆசிரியர் ஒருவர் இடைநிலைப் பள்ளி ஒன்றில், மாணவருடன் பாலியல் உறவில் இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். 43 வயதான அலிசன் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமை வழக்கு தொடரப்பட்டது.


மேலும் படிக்க | 16 வயது மாணவருடன் காரில் உடலுறவு... பெண் ஆசிரியரை கையும் களவுமாக பிடித்த போலீசார்!
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ