திமுக அதிமுக மட்டுமே ஆட்சியில் இருக்கும் ; நாங்கள் பங்காளிகள் - கே.பி.முனுசாமி அதிரடி

KP Munusamy Press Meet : திமுகவுக்கு மாற்றாக கருதப்பட்டு வந்த அதிமுக நீர்த்துப்போய்விடுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாங்கள் பங்காளிகள் ; ஆனால் எப்போதும் பகை இருக்கும் என்று அதிமுக முக்கிய பிரமுகர் கே.பி.முனுசாமி திடீர் பேட்டியளித்துள்ளார்.  

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Jun 30, 2022, 05:18 PM IST
  • ‘திமுக, அதிமுக மட்டுமே ஆட்சியில் இருக்கும்’
  • ‘நாங்கள் பங்காளிகள் ; ஆனால் பகை எப்போதுமிருக்கும்’
  • அதிமுக எப்போதும் நீர்த்துப் போகாது - கே.பி.முனுசாமி அதிரடிப் பேட்டி
திமுக அதிமுக மட்டுமே ஆட்சியில் இருக்கும் ; நாங்கள் பங்காளிகள் - கே.பி.முனுசாமி அதிரடி  title=

நடைபெற உள்ள உள்ளாட்சித்  இடைத்தேர்தலில் படிவம் ஏ.பி. ஆகியவற்றில் கையெழுத்து இடும் அதிகாரத்தை ஓபிஎஸ் இழந்துவிட்டார் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். 
ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து அடுத்தடுத்த திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், கிருஷ்ணகிரியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

மேலும் படிக்க | EPS vs OPS : முடங்கியது இரட்டை இலை சின்னம்., இந்த தேர்தலில் யாருக்கும் இல்லை

‘பொதுக்குழு தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுக்குழு நடத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அந்தக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடிய விஷயத்தை தலைவர்கள் புரிந்துகொண்டு விவாதிக்க வேண்டும். ஆனால் மாறாக ஓபிஎஸ் பொதுக்குழுவை கூட்டுவதை விரும்பாமல் ஒரு கற்பனையை ஏற்படுத்திக் கொண்டு ஒரு கடிதத்தை ஓபிஎஸ் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் எழுதி இணை ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பி வைக்கின்றனர்.

 அந்த கடிதத்தில் முன்னறிவிப்பு இன்றி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளதால் கழகத் தொண்டர்கள் கொந்தளித்து குழப்பத்தில் உள்ளனர். இதனால் கட்சியின் நற்பெயர்க்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. தொண்டர்களிடையே பிரச்சனை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. கழகத் தொண்டர்கள் அமைதி காக்குமாறு அந்தக் கடிதத்தில் ஓ.பி.எஸ் எழுதியுள்ளார். ஒரு கட்சியின் தலைவராக உள்ள அவர், பொதுக்குழுவில் பங்கேற்று விவாதங்களில் ஈடுபட்டு தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும். 

ஆனால் அவரோ, பொதுக்குழு நடத்தக்கூடாது என்ற நோக்கில் செயல்படுகிறார். ஒரு கட்சியின் தலைவரே கட்சியின் கட்டுப்பாடுகளை, கொள்கைகளை மீறி நீதிமன்றத்திற்கு செல்கிறார். கட்சியின் விதிமுறைப்படி கட்டுப்பாட்டை மீறி நீதிமன்றம் சென்றால் அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்பது விதி. அப்படிப்பட்ட நிலையில் ஓபிஎஸ் அவர்கள் அதிமுகவின் உள்ளாட்சி இடைத்தேர்தலில் வேட்பாளர் அங்கீகார கடிதத்தில் கையெழுத்திடும் தார்மீக உரிமையை இழந்துவிட்டார்.

ஒற்றை தலைமை வேண்டுமென அதிமுகவில் உள்ள தலைமை செயற்குழு உறுப்பினர்கள் 70 பேரும், மாவட்ட செயலாளர்கள் 70 பேரும், சட்டமன்ற உறுப்பினர்கள் 63 பேரும், 2,580 பொதுக்குழு உறுப்பினர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இப்படி பெரும்பான்மையுடைய கருத்து ஒற்றை தலைமை வேண்டும் என்பதுதான். 1999ம் ஆண்டு பென்னாகரம் பகுதியை சேர்ந்த ஒன்றிய செயலாளர் அன்பழகன் ஒரு நிகழ்ச்சியில் உதயசூரியன் சின்னம் முன்பாக நின்றதால் அவரை ஜெயலலிதா கட்சியில் இருந்து நீக்கி கடுமையாக எச்சரித்தார். 

மேலும் படிக்க | EPSvsOPS : ஓபிஎஸ்-தான் துரோகத்தின் அடையாளம் : ஜெயக்குமார் காட்டம்

ஆனால், ஆளுநர் மாளிகையில் திமுக முதலமைச்சருடன் ஓ.பி.எஸ் தேனீர் அருந்துவதும், சட்டப்பேரவையின் பாரசக்தி படம் கதை வைத்திருப்பதாகவும், ஒபிஎஸ் மகன் முதலமைச்சரை சந்தித்து ஆட்சி சிறப்பாக இருக்கிறது என சொல்லுவதையும், அதனை திமுக அமைச்சர் பொது மேடையில் பேசுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தில் உள்ள பல கட்சிகள் இனி நாங்கள்தான் என பேசலாம். அது நடக்காது. திமுக, அதிமுக மட்டுமே ஆட்சியில் இருககும். நாங்கள் பங்காளிகள் ; ஆனால் பகை எப்போதும் இருக்கும். இந்த பகைக்கு நீர்த்து போகும் வகையில் செயல்பட்டால் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். 

ஒபிஎஸ் அந்த வகையில் நீர்த்து போகி விட்டார். அவரை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. கட்சி நிர்வாகிகள் அண்மைக்காலமாகவே ஒற்றை தலைமை வேண்டும் என ஒருவருக்கொருவர் பேசி வந்த நிலையில் அதற்கு ஒத்துழைப்பு தராததால் தான் தற்போது ஒற்றை தலைமைக்கான அவசியம் நேரிட்டது. ஒற்றை தலைமையாக இருக்கும் திமுகவை எதிர்க்க அதிமுகவிற்கும் ஒற்றை தலைமை என்பது அவசியமாகிறது. ஓபிஎஸ் அவர்களின் செயல்பாடு நம்பிக்கை இல்லாத வகையில் தான் தற்போது ஒட்டுமொத்த அதிமுக நிர்வாகிகளும் ஒற்றைத் தலைமையை முன்னிறுத்தி எடப்பாடி பழனிச்சாமி வரவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். 

மேலும் எந்த ஒரு முடிவு எடுப்பதிலும் இரட்டை தலைமையால் கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது என ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வருவது தர்ம சங்கடங்களை ஏற்படுகிறது. திமுகவை கடுமையாக எதிர்க்க வேண்டிய நிலையில் ஓபிஎஸ் அவர்களின் செயல்பாட்டால் ஒற்றை தலைமையே தற்போது வேண்டும் என்பதை உணர்த்துகிறது. இந்த சூழ்நிலைக்கும் ஓ.பன்னீர்செல்வம்தான் காரணம்.’ என்று கே.பி.முனுசாமி தெரிவித்தார். 

மேலும் படிக்க | OPSvsEPS : அதிமுக அலுவலகத்தில் இருந்து ஓபிஎஸ் படம் அகற்றம்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News