8வது ஊதியக் குழுவின் சமீபத்திய புதுப்பிப்புகள்: மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நாடு முழுவதும் உள்ள ஊழியர்களுக்கு பொருந்தும். ஊழியர்களும் அதன் பலனைப் பெற்று வருகின்றனர். எனினும், தங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டதை விட குறைவான சம்பளம் கிடைப்பதாக ஊழியர்களிடையில் ஒரு புகார் உள்ளது. இது தொடர்பாக மகஜர் தயாரித்து வருவதாகவும், விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஊழியர் சங்கங்கள் தெரிவிக்கின்றன. இந்த குறிப்பாணையில் உள்ள பரிந்துரைகளின்படி, சம்பளத்தை உயர்த்த வேண்டும் அல்லது 8வது ஊதியக்குழுவை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படும். மறுபுறம், 8-வது ஊதியக்கமிஷனை அமல்படுத்துவது தொடர்பான எந்த யோசனையும் தற்போது இல்லை என அரசாங்கம் திட்டவட்டமாக கூறிவிட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறைந்தபட்ச சம்பளம் 26 ஆயிரம் ரூபாய் வரை இருக்கலாம்


எங்கள் இணை இணையதளமான ஜீ பிசினஸ்ஸின் அறிக்கையின் படி, தற்போது குறைந்தபட்ச ஊதிய வரம்பு ரூ.18,000 ஆக வைக்கப்பட்டுள்ளதாக மத்திய பணியாளர் அமைப்புகள் கூறுகின்றன. இதில் ஃபிட்மென்ட் ஃபேக்டருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த காரணி 2.57 மடங்காக உள்ளது. இருப்பினும் 7வது ஊதியக்குழுவில் இதை 3.68 மடங்கு வரை வைத்திருக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அப்படி நடந்தால், ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.26 ஆயிரமாக உயரும்.


அரசாங்கம் ஒரு புதிய அமைப்பையும் தொடங்கக்கூடும்


தற்போது 7வது ஊதியக்குழுவுக்கு பிறகு புதிய ஊதியக்குழு வராது என தகவல்கள் தெரிவிக்கின்றன. மாறாக அரசு ஊழியர்களின் சம்பளத்தை தானாக உயர்த்தும் முறையை அரசு அமல்படுத்தப் போகிறது எனவும் தகவும் வெளியாகியுள்ளன. இது 'தானியங்கு ஊதிய திருத்த முறை'யாக இருக்கலாம். 


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட், உயர்ந்தது டிஏ, இரு தவணைகளில் அரியர் 


இதில் டிஏ 50 சதவீதத்திற்கு மேல் இருந்தால், சம்பளத்தில் தானாக திருத்தம் செய்யப்படும். இது நடந்தால், 68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 52 லட்சம் ஓய்வூதியதாரர்களும் இதன் நேரடி பலனைப் பெறுவார்கள். ஆனால், இது குறித்து அரசு இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. இது குறித்து அரசு முடிவெடுக்கும் போது, ​​அதிகாரப்பூர்வமாக அறிவிக்கை வெளியிடப்படும்.


குறைந்த வருமானம் உடையவர்களின் சம்பளம் மேலும் அதிகரிக்கலாம்


இந்த விவகாரம் தொடர்பான நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு கீழ் வகுப்பு முதல் நடுத்தர வகுப்பில் உள்ள ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்க வேண்டும். இதுபோன்ற சூழ்நிலையில், 2023-ம் ஆண்டு புதிய சம்பள ஃபார்முலாவை அரசு கொண்டு வந்தால், நடுத்தர ஊழியர்களுக்கு அதிக பலன் கிடைக்காமல் போகலாம். ஆனால் குறைந்த வருமானம் உள்ள ஊழியர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். அவர்களது அடிப்படை சம்பளம் ரூ.3 ஆயிரம் உயர்ந்து ரூ.21 ஆயிரம் வரை அதிகரிக்கலாம்.’ என்றார்.


ஒன்றியம் அரசுக்கு குறிப்பாணை சமர்ப்பிக்கும்


மத்திய ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘சம்பள உயர்வு கோரிக்கைகள் குறித்து விரைவில் அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசிடம் ஒப்படைக்க உள்ளோம். கோரிக்கைகளை அரசு ஏற்க மறுத்தால், தொழிற்சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும். இந்த இயக்கத்தில், ஊழியர்களுடன், ஓய்வூதியம் பெற்ற ஊழியர்களும் பங்கேற்பர்.’ என்றார்.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு குட் நியூஸ்; சம்பளத்தில் பம்பர உயர்வு 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ