7th Pay Commission: அகவிலைப்படி அரியர் தொகை பற்றிய முக்கிய அப்டேட்

7th Pay Commission: லெவல்-3ல் உள்ள ஊழியர்களுக்கான அகவிலைபப்டி நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை இருக்கும் என்றும், லெவல்-13, லெவல்-14 ஊழியர்களுக்கு ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரை நிலுவைத் தொகை இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 7, 2022, 11:16 AM IST
  • அகவிலைப்படி அரியர் எவ்வளவு கிடைக்கும்?
  • லெவல்-1 ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகையாக ரூ.11,880 - ரூ.37,000 கிடைக்கும்.
  • லெவல்-13 ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகையாக ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரை கிடைக்கும்.
7th Pay Commission: அகவிலைப்படி அரியர் தொகை பற்றிய முக்கிய அப்டேட் title=

7வது ஊதியக்குழுவின் சமீபத்திய செய்தி: தீபாவளிக்கு முன்னதாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டதை அடுத்து, மத்திய அரசு ஊழியர்கள் மற்றொரு நல்ல செய்திக்காக காத்திருக்கின்றனர். ஊழியர்கள் இப்போது ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிப்பு மற்றும் வீட்டு வாடகை கொடுப்பனவு (எஹ்ஆர்ஏ) பற்றிய செய்திக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வரக்கூடும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதற்கிடையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 18 மாத அகவிலைப்படி (டிஏ) பாக்கிகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்ட நாட்களாக அகவிலைப்படி நிலுவைத் தொகையை அரசாங்கம் தங்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அரசு ஊழியர்கள் மத்தியில் வலுத்து வருகிறது.

அரசு ஊழியர்களுக்கு 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை மூன்று தவணைகளில் கிடைக்கும் என பல வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கோவிட் தொற்றுநோய் காரணமாக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை அகவிலைப்படி முடக்கப்பட்டது. இதற்கான 18 மாத டிஏ நிலுவைத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | 7th Pay Commission:18 மாத டிஏ நிலுவை தொகை! 3 தவணையில் கொடுக்க திட்டம்? 

கடந்த இரண்டு ஆண்டுகளாக, டிஏ நிலுவைத் தொகை விவகாரம் அமைச்சரவையின் பரிசீலனைக்காக நிலுவையில் உள்ளது. லெவல்-3ல் உள்ள ஊழியர்களுக்கான அகவிலைபப்டி நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை இருக்கும் என்றும், லெவல்-13, லெவல்-14 ஊழியர்களுக்கு ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரை நிலுவைத் தொகை இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அரசுடனான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அதில் ஒரு சுமுகமான முடிவு எடுக்கப்பட்டால், அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய தொகை கணக்கில் வரும். 

அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டது

செப்டம்பரில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தியது. 34 சதவிகிதமாக இருந்த அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதற்கு முன், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31 சதவீதமாக இருந்தது. இது 2022 ஜனவரியில் 34 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

சுவாரஸ்யமாக, 4% அகவிலைபப்டி உயர்வால் நாடு முழுவதும் 50 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் 61 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைந்துள்ளனர்.

அடுத்த டிஏ உயர்வு எப்போது?

இதற்கிடையில், அரசு ஊழியர்கள் தங்களுக்கு அடுத்த அகவிலைப்படி உயர்வு எப்போது கிடைக்கும் என்பது பற்றிய சிந்தனையில் உள்ளனர். டிஏ உயர்வு குறித்த மையத்தின் முடிவு மற்றும் சமீபத்திய போக்குகளின்படி, மார்ச் 2023ல் அரசு ஊழியர்கள் அடுத்த டிஏ உயர்வைப் பெறுவார்கள். மேலும், 7 ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் படி, மத்திய அரசு அகவிலைப்படியை 3 முதல் 5 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு முக்கிய செய்தி, GPF விதிகளில் மாற்றம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News