ஏழாவது ஊதியக் குழுவின் சமீபத்திய செய்திகள்: ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கூடிய விரைவில் மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி, ஓய்வூதியம் பெறுவோர் ஓய்வூதியம் ஆகியவற்றில் நல்ல அதிகரிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. தொழிலாளர் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட ஜனவரி முதல் ஜூன் 2023 வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டின் தரவுகளின்படி, இம்முறையும் அகவிலைப்படி (டிஏ உயர்வு) மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர் உயர்வு) 4 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இது நடந்தால், தற்போது இருக்கும் 42 சதவீத அகவிலைப்படியில் இருந்து 46 சதவீதமாக அதிகரிக்கப்படலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய ஊழியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்


இருப்பினும் இதுவரை இது தொடர்பாக அரசு தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பதால், அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக மத்திய ஊழியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இது தொடர்பாக அரசு தரப்பில் அப்டேட் சரியாக வழங்கப்பட்டால், ஆவணி அவிட்டம் மற்றும் தீபாவளிக்கு இடையில் எப்போது வேண்டுமானாலும் அகவிலைப்படியை உயர்த்தப்படலாம். இதனுடன், மற்றொரு நல்ல விஷயம் என்னவென்றால், அகவிலைப்படியின் அதிகரிப்பு, அதாவது அதிகரித்த கட்டணங்கள், கடந்த மாதம் ஜூலை 1, 2023 முதல் மட்டுமே பொருந்தும் என்று கருதப்படும்.


அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்படும்


உண்மையில், பணவீக்க விகிதத்தின் அடிப்படையில் (7th Pay Commission) மத்திய அரசு தனது ஊழியர்களின் அகவிலைப்படியை அதிகரிக்கிறது. அதன்படி ஜூன் 2023க்கான ஏஐசிபிஐ இன்டெக்ஸ் தரவுகளின் அடிப்படையில், இம்முறையும் டிஏ 4 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இது நடந்தால், மூன்றாவது முறையாக அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்படும்.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு நல்ல செய்தி.. விரைவில் 50% டிஏ, விவரம் இதோ


சம்பளம் 27,000 ரூபாயாக உயர்த்தப்படும்


முன்னதாக ஜூலை 2022 இல், அகவிலைப்படி 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக, 4 சதவீத அதிகரிப்புடன் அதிகரிக்கப்பட்டது. அதன் பிறகு, இரண்டாவது முறையாக மார்ச் 24, 2023 அன்று, மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டது. அதன்பின், டிஏ 38ல் இருந்து 42 சதவீதமாக அதிகரித்தது. இம்முறையும் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டால், அகவிலைப்படி 42ல் இருந்து 46 சதவீதமாக உயரும். இந்த அதிரடி உயர்வு நடந்தால், மத்திய ஊழியர்களின் ஆண்டு சம்பளம் 8,000 ரூபாயில் இருந்து 27,000 ரூபாயாக உயர்த்தப்படும்.


ஹாட்ரிக் உயர்வு இருக்கும்


இதனால், இந்த முறையும் 4 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தும் (7th Pay Commission) இந்த போக்கை அரசு தொடரும் என மத்திய ஊழியர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இது நடந்தால், தொடர்ந்து மூன்று முறை டிஏவில் 4 சதவீதம் என்ற ஹாட்ரிக் உயர்வு இருக்கும்.


ஆண்டுக்கு இருமுறை DA, DR ஹைக்


மத்திய அரசு, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில், ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி (டிஏ உயர்வு) மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி (டிஆர் உயர்வு) ஆகியவற்றை தரவுகளின் அடிப்படையில் மதிப்பாய்வு செய்து உயர்த்துகிறது.


அகவிலைப்படி (DA Hike) மற்றும் அகவிலை நிவாரணம் (DR Hike) ஆகியவற்றின் இந்த அதிகரிப்பு, சுமார் 47.58 லட்சம் மத்திய ஊழியர்களும் 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடையக்கூடும் என்பதுகுறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | 7th Pay Commission மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி.. 45% டிஏ, அறிவிப்பு எப்போது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ