தேர்தலில் ரஜினி, கமலுக்கு கிடைக்கும் அடி, இனி எந்த நடிகர்களும் அரசியலுக்கு வர பயப்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சி சீமான் ஆவேசம்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் (TN Assembly Election 2021) நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர். AIADMK – DMK இடையே எப்போதும் வழக்கம் போல நேரடி போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையில், ரஜினியும் (Rajinikanth) ஜனவரி மாதம் கட்சி துவங்குவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், அனைத்து காட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருக்கின்றனர். இந்த நிலையில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பான வழக்கில் சீமான் (Seeman) சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜரானார். 


இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில்., “பிரபாகரன் மீது மதிப்பு வைத்திருந்தார் MGR அதனால் அவரை மதிக்கிறோம். மற்றபடி MGR என்ன சிறந்த ஆட்சியை தந்தார்? பரப்புரையில் MGR குறித்து பேசினால், அதிமுகவின் இரட்டை இலைக்கும் தான் ஓட்டு போடுவார்கள். அரசியலே தெரியாமல் பேசும் கமல் மக்களை கேவலமாக நினைக்கிறார். 


ALSO READ | தமிழகத்தில் MNM ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் - கமல் அதிரடி!


தேர்தலில் ரஜினி (Rajinikanth) கமலுக்கு கிடைக்கும் கிடைக்கும் அடி, எந்த நடிகர்களும் அரசியலுக்கு வரவே பயப்பட வேண்டும். அவர்களை அடிக்கிற அடியில் வேறு விஜய் கூட அரசியலுக்கு வர பயப்பட வேண்டும் ” என அவர் திட்டவட்டாமாக கூறினார். 


சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகியுள்ள ரஜினியும், கமலும் (Kamal Haasan) MGR-யை முன்னிலைப்படுத்தி பேசி வருகிறார்கள். எம்ஜிஆரின் மடியில் வளர்ந்தவன் நான்; MGR எங்கள் சொத்து என தேர்தல் பரப்புரையில் கமல் ஹாசன் MGR பற்றி பேசி வரும் நிலையில் நாம் தமிழர் கட்சி சீமான் விமர்சித்தார்.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR