முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தை சுவைக்க விரும்பாதவர்களை பார்ப்பது மிகவும் அரிது. இதில் எண்ணற்ற சத்துக்களுடன் கரையக்கூடிய நார்ச்சத்துக்களும் இருப்பதால், நீண்டநேரத்திற்கு பசி உணர்வு இருக்காது. எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களும் தங்கள் டயட்டில் எவ்வித தயக்கமுமின்றி சேர்த்துக்கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாம்பழத்தில் அளவற்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. வைட்டமின் சியைத் தவிர, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, பொட்டாசியம், மக்னீசியம் போன்ற பிற சத்துகளும் நிறைந்துள்ளன.


இந்நிலையில், மாம்பழம் சாப்பிடும் போது செய்யக் கூடாதவற்றை குறித்து அறிந்து கொள்ளலாம். மாம்பழத்தை ருசித்த பிறகுஇந்த 5 பொருட்களை சாப்பிடக் கூடாது என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.


மேலும் படிக்க | Health Alert: சாப்பிட்ட பின் ஒரு போதும் செய்யக் கூடாதவை


மாம்பழங்களை உட்கொண்ட உடனேயே தவிர்க்க வேண்டிய உணவுகள்: 


கோடை கால வெய்யில் உடலை வாட்டினாலும், மாம்பழ சீசனுக்காக பலர் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மாம்பழத்தின் மீதுள்ள மோகம்தான் இதற்குக் காரணம். ஆனால் அதை உட்கொண்ட பிறகு, சில தவறுகளைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.


மாம்பழம் சாப்பிட்ட பிறகு இவற்றை சாப்பிட வேண்டாம்


1. தண்ணீர்


கோடையில் உடலில் நீர்ச்சத்து குறைய சீரான இடைவெளியில் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். ஆனால் மாம்பழம் சாப்பிட்ட பிறகு இதை செய்யாதீர்கள். இதனால் வயிற்று வலி ஏற்படும். குறைந்தது 30 நிமிடங்களுக்குப் பிறகுதான் தண்ணீர் குடிக்க வேண்டும்.


2. தயிர்


கோடையில் வயிற்றைக் குளிர்ச்சியாக வைத்திருக்க தயிர் சாப்பிடுவது நல்லது என சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள், ஆனால் மாம்பழம் சாப்பிட்ட பிறகு தயிரைத் தொடாதீர்கள். ஏனெனில் இது சளி மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.


மேலும் படிக்க | மிதமிஞ்சிய உப்பு உயிருக்கே ஆபத்து; எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்


3. பாகற்காய்


பாகற்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது, ஆனால் மாம்பழத்தை உட்கொண்ட உடனேயே அதை சாப்பிடக்கூடாது. இதனால் வாந்தி, தலைச்சுற்றல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.


4. மசாலா


கோடையில் மாம்பழத்தைச் சுவைக்க வேண்டும், ஆனால் இந்த பழத்தை சாப்பிட்ட பிறகு, அதிக மிளகாய் மற்றும் மசாலாப் பொருட்களை உட்கொள்வதைத் தவிர்க்கவும். இதனால் தோல் எரிச்சல் மற்றும் அரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.


5. குளிர் பானங்கள்


குளிர் பானங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் மாம்பழம் சாப்பிட்ட பிறகு, அத்தகைய பானத்தை குடிக்கக்கூடாது, ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவை கணிசமாக அதிகரிக்கிறது. இதைத் அடிக்கடி செய்வதால், சர்க்கரை நோய் போன்ற கடுமையான நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | நரை முடி கருமையாக, முடி பளபளக்க இதை செய்தால் போதும்: சூப்பர் டிப்ஸ் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR