Bizarre Incident: கணவன் மனைவியிடம் இருந்தும், மனைவி கணவனிடம் இருந்தும் பல காரணங்களுக்காக விவாகரத்து வாங்கியிருப்பார்கள். அதில் பல கொடுமையான காரணங்களும் இருக்கும், சில வினோதமான காரணங்களும் இருக்கும். என் கணவன் அதிகம் குறட்டை விடுகிறார் என்றும் அதனால் தனக்கு விவாகரத்து வேண்டும் என மனைவி நீதிமன்றத்தில் மனு தாக்கல செய்த வரலாறு இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்படியிருக்க, தற்போது இதேபோன்று ஒரு காரணத்திற்கு உத்தர பிரதேச பெண்மணி ஒருவர் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தரக்கோரி மனு அளித்துள்ளார். அந்த வினோதமான காரணத்தை கேட்டு பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதாவது, அவரது கணவன் சுகாதாரத்தில் பெரிய நாட்டம் இல்லாதவராக இருப்பவராகவும், அதனால் அவருடன் வாழ முடியவில்லை என்றும் அந்த பெண் மனுவில் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, அந்த கணவன் 30 நாள்களுக்கு மேலாக குளிக்காமல் இருந்ததாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். 


மாதத்திற்கு 2 முறை...


உத்தர பிரதேசத்தின் ஆக்ரா மாவட்டத்தைச் சேர்ந்த அந்த பெண் தனது கணவன் திருமணமாகி முதல் 40 நாள்களில் வெறும் 6 முறை மட்டுமே குளித்ததாகவும், இதனால் அவரின் உடலில் இருந்து துர்நாற்றத்தை தன்னால் சகித்துக்கொள்ள இயலவில்லை என்றும் கூறியுள்ளார். ஒரு மாதத்திற்கு 2 நாள்கள் மட்டுமே குளிப்பதை அந்த நபர் வழக்கமாக வைத்திருப்பதாகவும் மனைவி கூறியுள்ளார். இதுகுறித்து அந்த பெண் குடும்ப நலன் ஆலோசனை மையத்தை தொடர்புகொண்டு தனது நிலை குறித்து விவரித்துள்ளார்.


மேலும் படிக்க |  டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்?


கணவன் சொன்ன காரணம்


இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், இது உண்மையான என்று அறிய அந்த பெண்ணின் கணவர் ராஜேஷை அழைத்து விசாரித்தனர். அப்போது அவர் கூறியது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, அந்த நபர் கங்கை ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அதை தனது உடம்பில் தெளித்துக்கொள்வார் என்றும் மனைவி வற்புறுத்தியதாலேயே 40 நாள்களில் 6 முறை குளித்ததாகவும் கூறியுள்ளார். 


திருமணமான சில நாளிலேயே தனது கணவனின் இந்த ஆரோக்கியமற்ற செயல்பாடை கண்ட மனைவி அவருடன் தொடர்ந்து சண்டை போட்டு வந்துள்ளார். அவர் தினமும் குளிக்க மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்த பெண் தனது பெற்றோர் வீட்டுக்கே திரும்பிச் சென்றுள்ளார். இதையடுத்து, அந்த பெண்ணின் குடும்பத்தினரும் ராஜேஷ் மீது வரதட்சனை கொடுமை என புகார் அளித்துள்ளனர், காவல்துறையினரும் இதுகுறித்து வழக்கு தொடுத்துள்ளனர். 


கிடைத்தது தீர்வு


தொடர்ந்து, அந்த நபரிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என அந்த பெண் கோரிக்கை விடுத்துள்ளார். இருந்தாலும், திருமணமாகி சில நாள்களே ஆனதால் இதில் குடும்பல நல ஆலோசனை மையத்தின் அதிகாரிகள் தலையிட்டு ராஜேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இதை தொடர்ந்து, அந்த கணவர் தினமும் குளிப்பதற்கு ஒப்புகொண்டுள்ளார். கணவன் இதை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவருடன் சேர்ந்து குடும்பம் நடத்தவும் மனைவி உடன்பட்டார். இருப்பினும், வரும் செப். 22ஆம் தேதி மீண்டும் ஒருமுறை இந்த பிரச்னையை தீர்க்க குடும்ப நல ஆலோசனை மையத்தில் ஆஜராக இந்த தம்பதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  


மேலும் படிக்க | பிரதமர் பதவி தருகிறேன் என்று எதிர்க்கட்சி தலைவர் என்னை அணுகினார்: நிதின் கட்கரி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ