புதுடெல்லி: மூன்று பெரிய வழக்குகள் குறித்து உச்ச நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) இறுதி தீர்ப்பை வழங்க உள்ளது. இதனால் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தென்னிந்தியாவை பொறுத்த வரை சபரிமலை வழக்கும், அதேவேலையில் மத்திய அரசை ஆட்டம் காண செய்த ரபேல் வழக்கு குறித்து இறுதி தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் வழங்க உள்ளது. இந்த வழக்கு விசாரணை இன்று காலை சுமார் 10.30 மணி அளவில் தொடங்க உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏற்கனவே கடந்த 9 ஆம் தேதி 100 ஆண்டுகளாக பிரச்சனையில் இருந்த சர்ச்சரிக்குரிய அயோத்தி நிலத்தகராறு வழக்கில் உச்ச நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பை வழங்கியது. அதனையடுத்து நேற்று கர்நாடகாவில் (Karnataka) தகுதி நீக்கம் செய்யபப்ட்ட 17 எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கு தீர்ப்பு, அதனுடன் தலைமை நீதிபதி அலுவலகம் தகவல் அறியும் உரிமை கீழ் வருமா? வருதா? என்ற வழக்கின் தீர்ப்பை வழங்கியது.


எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும். சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிடாது என்று கூறிய உச்ச நீதிமன்றம், கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்கள் டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிடலாம் எனவும் அறிவித்துதது.


அதனையடுத்து சி.ஜே.ஐ (CJI) அலுவலகம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வர வேண்டுமா? இல்லையா? என்பது குறித்து மனு மீதனா விசாரணை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அப்பொழுது சில நிபந்தனைகளுடன், தகவல் அறியும் உரிமை (Right to Information Act) கீழ் இந்திய தலைமை நீதிபதி துறை வரும் என்றும், தகவல்களை வழங்குவது நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிக்காது. ஆனால் சில தகவல்களின் தனியுரிமை மற்றும் ரகசியத்தன்மை குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் (Supreme Court) தெரிவித்தது. 


இன்று மூன்று வழக்குகளின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்க உள்ளது. அது எந்தெந்த வழக்குகள் என்று பார்ப்போம்.


ரஃபேல் (Rafale Case) மற்றும் சபரிமலை வழக்குகள் (Sabarimala Case) ஆகும். இந்த இரண்டு வழக்குகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள மறுஆய்வு மனு விசாரணை தீர்ப்பை இன்று காலை 10:30 மணிக்கு உச்ச நீதிமன்றம் (Supreme Court of India) அறிவிக்க உள்ளது. அதேசமயம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பாரதீய ஜனதா கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மீனாட்சி லேக்கி தாக்கல் செய்த அவமதிப்பு மனு மீதான தீர்ப்பை நீதிமன்றம் வழங்க உள்ளது. "சவுகிதார் சோர் ஹை" (காவல்காரன் ஒரு திருடன்) என மோதி குறித்து ராகுல் காந்தி (Rahul Gandhi) கூறியதற்கு நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியிருந்தாலும், அந்த வழக்கு குறித்து இறுதி தீர்ப்பை நீதிமன்றம் வழங்க உள்ளது.


உண்மையில், சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 - 50 வயது பெண்கள் நுழைய தடை இல்லை என்றும், அய்யப்பன் கோவிலில் நுழைய அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதாவது ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச் 4: 1 என்ற விகிதத்தில் பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு இந்து மத அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்களை நடத்தினர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.


சபரிமலை ஐயப்பன் பெண்கள் நுழையும் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சுமார் 56 சீராய்வு மனுக்கள் சுப்ரீம்கோர்டில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் உட்பட, 48 மனுக்கள் மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை முடிந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.


அடுத்த முக்கிய வழக்கான ரஃபேல் வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்க உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரி முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா மற்றும் அருண் ஷோரி உள்ளிட்ட பலர் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை அளிக்க உள்ளது. இந்த ரஃபேல் விவகாரம் ஆளும் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு பெரும் தலைவலியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது