7வது ஊதியக் குழுவின் புதுப்பிப்புகள்: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஜூலை மாதத்தில் தங்கள் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் நல்ல அதிகரிப்பை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு முந்தைய அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பை மத்திய அரசு மார்ச் மாதம் வெளியிட்டது. இது ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வந்தது. மத்திய அரசு அடுத்த முறையும் அகவிலைப்படியை 4 சதவிகிதம் அதிகரிக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஃபிட்மெண்ட்ஃபாக்டர்


ஃபிட்மென்ட் ஃபாக்டரை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு ஊஃழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து  வருகின்றனர். இதன் அதிகரிப்பைத் தொடர்ந்து, மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000ல் இருந்து ரூ.26,000 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அகவிலைப்படி எவ்வளவு உயர்த்தப்படும்?


அகவிலைப்படி அதிகரிப்பை பற்றி இங்கு காணலாம்:


- உதாரணமாக, குறைந்தபட்ச மாத வருமானம் ரூ. 18,000 ஆக இருப்பவர்களுக்கு, ஜூலை முதல் ரூ. 720 அதிகரிக்கும். இதன் விளைவாக, ஒவ்வொரு ஆண்டும் ரூ. 8640 அதிகரிக்கும்.


- உங்கள் அடிப்படை மாத சம்பளம் ரூ. 56,900 ஆக இருந்து ஜூலை மாதம் முதல் அகவிலைபப்டி 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டால், உங்கள் மாத சம்பளத்தில் ரூ. 2,276 உயர்வு இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் ரூ. 27,312 அதிகரிக்கும்.


7வது சம்பள கமிஷன்: ஃபிட்மென்ட் ஃபாக்டர்


தற்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கு 2.57 சதவீதம் ஃபிட்மென்ட் ஃபாக்டர் வழங்கப்படுகிறது. அதை 3.68 மடங்காக உயர்த்த கோரிக்கை எழுந்துள்ளது. ஃபிட்மென்ட் ஃபாக்டரை அரசு 2.57ல் இருந்து 3.68 ஆக உயர்த்தினால், குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ. 18,000ல் இருந்து ரூ. 26,000 ஆக உயரும். இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் மிகப்பெரிய அளவில் உயர்த்தப்படும்.


வரும் நிதியாண்டுக்கான டிஏ விகிதத்தில் ஏப்ரல் 1 முதல் பல மாநிலங்கள் மாற்றங்களை அறிவித்துள்ளன. இந்த மாநிலங்களில், 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. புதிய நிதியாண்டின் கடந்த 60 நாட்களில் எந்தெந்த மாநிலங்கள் அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளன என்பதை இங்கே காணலாம்.


மேலும் படிக்க | 7th Pay Commission 46% டிஏ ஹைக் உறுதி: வந்தது அதிரடியான அப்டேட்!! 


உத்தரப்பிரதேசம்


உ.பி அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை 4% உயர்த்த முடிவு செய்துள்ளது. முன்பு 38% ஆக இருந்த அகவிலைப்படி இப்போது உயர்வுக்குப் பிறகு ஊழியர்களுக்கு 42 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. 


கர்நாடகா


கர்நாடக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி விகிதத்தை 4% உயர்த்தியுள்ளது. 31% முதல் 35% ஆக, மாநிலத்தின் அகவிலைபப்டி விகிதம் உயர்ந்துள்ளது. புதிய விகிதம் ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வருகிறது. ஓய்வு பெற்றவர்களுக்கான அகவிலை நிவாரண (டிஆர்) வீதமும் மாநில அரசால் 31% லிருந்து 35% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


தமிழ்நாடு


ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, தமிழ்நாடு அரசு கடந்த மாதம் 7வது ஊதியக்குழுவின் கீழ் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை உயர்த்தியது. அகவிலைப்பைட் மற்றும் அகவிலை நிவாரணத்தில் 4% உயர்வுக்கு நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் டிஏ மாற்றம் அமலுக்கு வரும். தமிழகத்தில் அகவிலைப்படி 38 -ல் இருந்து 42 சதவீதமாக அதிகரித்துள்ளது.


ஹரியானா:


7வது ஊதியக் குழுவின் கீழ் பணம் பெறும் ஹரியானா அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் மாத தொடக்கத்தில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. ஹரியானாவில் உள்ள மாநில அரசு ஊழியர்களுக்கான டிஏ மனோகர் லால் கட்டர் அரசாங்கத்தின் கீழ் 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டது. ஏப்ரலில் இந்த அறிவிப்பு வந்தது.


மேலும் படிக்க | 7th Pay Commission மகிழ்ச்சி செய்தி: AICPI எண்களில் ஏற்றம், டிஏ அதிரடியாக அதிகரிக்கும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ