7வது சம்பள கமிஷன்: மத்தியஆரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி. இன்னும் சில மாதங்களில், சரியாக சொல்லவேண்டுமானால், ஜூலை மாதத்தில் அவர்கள் இரண்டு பரிசுகளை ஒன்றாகப் பெறக்கூடும். ஜூலை மாதத்தில் வழங்கப்படும் முதல் பரிசு அகவிலைப்படி அதிகரிப்பாகவும், இரண்டாவது பரிசு ஃபிட்மென்ட் ஃபாக்டரின் அதிகரிப்பாகவும் இருக்கலாம். மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, மத்திய அரசு ஜூலை மாதம் ஃபிட்மென்ட் ஃபாக்டரை உயர்த்தி அறிவிக்கக்கூடும். ஃபிட்மென்ட் ஃபாக்டரை அதிகரிக்க வேண்டும் என மத்திய ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிக்கப்பட்டால், அதன் கீழ் அடிப்படை சம்பளத்தில் அதிகரிப்பு ஏற்படும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

7வது சம்பள கமிஷன்: ஃபிட்மென்ட் ஃபாக்டர்


தற்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கு 2.57 சதவீதம் ஃபிட்மென்ட் ஃபாக்டர் வழங்கப்படுகிறது. அதை 3.68 மடங்காக உயர்த்த கோரிக்கை எழுந்துள்ளது. ஃபிட்மென்ட் ஃபாக்டரை அரசு 2.57ல் இருந்து 3.68 ஆக உயர்த்தினால், குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ. 18,000ல் இருந்து ரூ. 26,000 ஆக உயரும். இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் மிகப்பெரிய அளவில் உயர்த்தப்படும்.


அடிப்படை சம்பளம் அதிரடியாய் அதிகரிக்கும்


குறிப்பிடத்தக்க வகையில், கடந்த 2016 ஆம் ஆண்டு ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிக்கப்பட்டது. அதே ஆண்டில் 7வது ஊதியக் குழுவும் அமல்படுத்தப்பட்டது. அப்போது ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ. 6,000லிருந்து ரூ. 18,000 ஆக அதிகரித்தது. உச்சவரம்பு ரூ.90 ஆயிரத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. இப்போது, இந்த ஆண்டு மீண்டும் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மேலும் படிக்க | 7th Pay Commission: 18 மாத அரியர் குறித்த பெரிய அப்டேட், கிடைக்கவுள்ளதா நிலுவைத் தொகை?


அடிப்படை ஊதியம் ரூ. 18,000 -லிருந்து ரூ. 26,000 ஆக உயரும்


அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் அடிப்படை ஊதியத்தை ஃபிட்மென்ட் ஃபாக்டர் தீர்மானிக்கிறது. இம்முறை ஃபிட்மென்ட் பேக்டர் அதிகரிக்க வாய்ப்பு இருந்தால், குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ. 18,000 இல் இருந்து ரூ. 26,000 ஆக உயரும்.


சம்பளம் எவ்வளவு உயரும்?


ஏழாவது ஊதியக் குழுவின் படி, தற்போது ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆகும். இதில் மாற்றம் இருந்தால் முழு சம்பளத்திலும் மாற்றம் ஏற்படும். ஆகையால் இதை 3.68 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. தற்போது, ​​ஃபிட்மென்ட் ஃபாக்டரின் 2.57 மடங்கு மற்றும் அடிப்படை சம்பளம் ரூ.18000 என்ற அடிப்படையில், இதர அலவன்ஸ்கள் தவிர்த்து, ரூ.18,000 X 2.57 = ரூ.46260 கிடைக்கிறது. ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3.68 ஆக உயர்த்தப்பட்டால், மற்ற அலவன்ஸ்கள் தவிர்த்து, ஊழியர்களின் சம்பளம் 26000 X 3.68 = ரூ.95680 ஆக உயரும்.


அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை


2024 ஆம் ஆண்டில் மதிப்பாய்வு அடிப்படையில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.


அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்


ஜனவரி மாத அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்ட பிறகு, மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 42 சதவீதமாக அதிகரித்துள்ளது. இப்போது இதில் மேலும் 4 சதவீதம் அதிகரித்தால், டிஏ 46 சதவீதமாக உயரும். ஏழாவது ஊதியக் குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்களின் டிஏ ஆண்டுக்கு இரண்டு முறை அதிகரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 2023 இன் அகவிலைப்படி மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இப்போது ஜூலை 2023 இன் அகவிலைப்படி அடுத்தது அறிவிக்கப்படும். 


மேலும் படிக்க | 8th Pay Commission மிகப்பெரிய அப்டேட்: ஊதியத்தில் பம்பர் 44% ஏற்றம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ