தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சண்டக்கோழி' சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சண்டக்கோழி: இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாக தொடங்கியுள்ள புத்தம் புதிய சீரியல் சண்டக்கோழி. 


முதல் நாள் எபிசோட்டில் நாயகன் விக்ரம் மற்றும் நாயகி மகாவுக்கு இடையே மோதல் உருவான நிலையில் வரும் நாட்களில் இந்த சீரியலில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது. 


அதாவது, மகாவின் பெரியம்மா மகனுக்கும் ஹீரோ விக்ரமின் தங்கச்சிக்கும் திருமணம் நடக்க உள்ளது. இந்த கல்யாணத்துக்கு இரண்டு குடும்பமும் ஒன்று சேருகிறது. 


மகாவுக்கும் விக்ரமுக்கும் அதிகரிக்கும் மொதல்


இந்த கல்யாணத்தில் ஆட்டம் பாட்டம் என சந்தோஷமாக இருக்கும் மகாலட்சுமி விக்ரமை பார்த்ததும் ஏற்கனவே இருக்கும் கோபத்தில் அவனை வம்பு இழுத்து கீழே தள்ளி விடுகிறாள். இதனால் அவனுக்கும் மகாவுக்கும் இடையேயான மோதல் இன்னும் அதிகரிக்கிறது.



அடுத்ததாக விக்ரமின் தம்பி விஜய் மகாவின் அக்கா ஐஸ்வர்யாவை காதலிக்கிறான் என்பது தெரிய வருகிறது. அதே சமயம் மகாவின் பெரியம்மா மகள்  அபிநயாவும் விஜயை காதலிக்கிறாள்‌.


இதனால் ஏற்கனவே மகாலட்சுமி குடும்பத்தின் மீது அபிநயாவுக்கு கோபம் இருக்கும் நிலையில் கல்யாணத்தில் அபிநயா செய்ய வேண்டிய சடங்குகள் அனைத்தையும் மகாவையே செய்ய வைக்க அபிநயாவுக்கு இவர்கள் மீது இன்னும் கோபம் அதிகமாகிறது.


மகாவை பழிவாங்கும் அபிநயா


இதனால் மகாவை பழிவாங்க கல்யாணத்திற்காக வாங்கி வைத்திருந்த நகையை அபிநயா திருடி விடுகிறாள்‌. இதன் காரணமாக மகாவின் மீது திருட்டுப் பழி விழ அவள், ‘நான் நகையை எடுக்கவில்லை’ என சொல்கிறாள்‌. 



மேலும் படிக்க | அமுதாவும் அன்னலட்சுமியும்: அமுதாவை அவமானப்படுத்திய பழனி, தேர்தலில் நடக்க போவது என்ன?


மகாலட்சுமி குடும்பத்துக்கு அவமானம்


நகையை கண்டுபிடிக்க மகாலட்சுமி ஒருவரின் பையை எடுத்து பரிசோதனை செய்யும் போது இதை பார்த்த விக்ரம் மகா இந்த பையை எடுத்து திருட பார்ப்பதாக தவறாக புரிந்து கொண்டு போலீசில் புகார் கொடுக்கிறான். இதனால் மகாலட்சுமி குடும்பம் மொத்தமும் அவமானப்பட்டு நிற்கிறது. 



பழியிலிருந்து எப்படி மீள்வாள் மகாலட்சுமி?


இப்போது மகாலட்சுமி என்ன செய்வாள்? தன் மீது இது விழுந்த திருட்டு பழியில் இருந்து மகாலட்சுமி எப்படி மீண்டு வெளியே வரப் போகிறாள்? என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 



காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய ‘சண்டக்கோழி’ சீரியலின் அடுத்து வரும் எபிசோடுகளை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


சண்டக்கோழி: சீரியலை எங்கு பார்ப்பது?


சண்டக்கோழி சீரியல் 2023 மே 8 ஆம் தேதி முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | முதல் இரவில் உடைந்து விழுந்த கட்டில் - மாரி சீரியல் இன்றைய எபிசோட்!


மேலும் படிக்க | Beast Mode:திரையை தீ பிடிக்க வைத்த பீஸ்ட் மோட் பாடல் வீடியோ..சில நொடிகளிலேயே பல ஆயிரம் லைக்ஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ