மாரி-சூர்யாவுக்கு முதலிரவு..சகுந்தலாவுடன் சதி செய்யும் ஜாஸ்மின்:மாரி சீரியல் அப்டேட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.  

Last Updated : May 9, 2023, 12:04 PM IST
  • சூர்யாவிற்கும் மாரிக்கும் முதலிரவு நடக்கிறது.
  • சகுந்தலாவுடன் சேர்ந்து ஜாஸ்மீன் சதிசெய்கிறாள்.
  • பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் உள்ளது இன்றைய எபிசோட்.
மாரி-சூர்யாவுக்கு முதலிரவு..சகுந்தலாவுடன் சதி செய்யும் ஜாஸ்மின்:மாரி சீரியல் அப்டேட் title=

ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடர்களுள் பலரது கவனத்தையும் ஈர்த்த தொடர், மாரி. இத்தொடரில் அம்மனின் அருள் மிகுந்த பெண்ணாக பார்க்கப்படும் மாரியும் அவளை சுற்று நிகழும் சூழ்ச்சியும்தான் இந்த தொடரின் கதைக்களம். பல குடும்பத்தாரை கட்டிப்போட்ட இத்தொடர், விறுவிறுப்பான திருப்பங்களுடன் ரசிகர்களை ஷாக் ஆக்க உள்ளது. 

இதுவரை நடந்தது..

மாரியை கொல்வதற்கு அவளை சுற்றி சதி நடக்கிறது. மறுபக்கம் ஊர் மக்கள் நீலகண்டன் வீட்டுக்குச் சென்று ஒருவர், சூர்யா பணக்கார வீட்டை சேர்ந்தவர் என்பதால் ஏசி இல்லாமல் இருக்க மாட்டார் என ஏசி வாங்கி வந்து கொடுக்கிறார். இன்னொருவர் கோவில் திருவிழா முடியும் வரை அவங்களுக்கு தேவையான விருந்து என்னுடைய வீட்டில் இருந்து தான் வரும் என சொல்கிறார். 

இன்னொருவர், மாரி சூர்யா குடும்பத்துக்காக முழு ஆட்டையே ஒருவர் கொடுத்திருக்கிறார் என சொல்ல இதையெல்லாம் கேட்டு நீலகண்டன் அனைத்தும் சமயபுரத்து மாரியம்மனால் மாரிக்கு கிடைத்த பெருமை என மகிழ்ச்சியடைகிறார். மாரி சூர்யாவுக்கு வரவேற்பு கிடைத்த நிலையில் சகுந்தலா இதை பார்த்து கடுப்பாகினாள். இப்படியான நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

மேலும் படிக்க | சீதா ராமன்: மதுமிதா கொடுத்த அதிர்ச்சி.. சீதாவுக்காக சண்டை போட்ட ராம்

இன்றைய எபிசோடில் நடக்கவிருப்பது

சங்கரபாண்டி, ஜாஸ்மின் என இருவரும் சகுந்தலா வீட்டுக்கு வர அவள் மாரியை எதுக்கு இங்க அனுப்பனீங்க என கோபப்பட சங்கரபாண்டி தாரா எது பண்ணாலும் அதுல அர்த்தம் இருக்கும் என சொல்லி கொண்டிருக்க அப்போது தாரா போன் செய்ய நீங்களே பேசுங்க என சங்கரபாண்டி போனை கொடுக்கிறான். 

சகுந்தலா எதுக்கு மாரியை ஏன் அனுப்பின என கோபப்படுகிறாள். பின்பு,  அந்த மாரி சென்னைக்கு உயிரோட வர கூடாது என சொல்ல சகுந்தலா அப்படியா அதை நான் பார்த்துக்கறேன் என கூறி போனை கட் செய்கிறாள். பிறகு ஜாஸ்மின் அவளுக்கு முதல் மரியாதை கிடைக்க கூடாது, அதானே உங்க ஆசை. அவ தலையில் தூக்க போற சிலையில் பாம் வச்சிடலாம் என ஜாஸ்மின் ஐடியா கொடுக்க சகுந்தலாவும் சூப்பர் ஐடியா என சொல்கிறாள். 

அதனைத்தொடர்ந்து வீட்டுக்கு வரும் ஸ்ரீஜா என்னையெல்லாம் ஊர் காரங்க கூப்பிட மாட்டாங்களா என கோபமடைய அவள் பெரியம்மா மாரி சாதிச்சு காட்டி இருக்கா அவளை கூப்பிட்டாங்க என பதிலடி கொடுக்கிறாள். 

பிறகு இங்கே மாரி வீட்டில் சூர்யாவுக்கு சாப்பாடு பரிமாறி சாப்பிட வைக்கின்றனர். அடுத்து ரூமில் இருக்கும் அவனுக்கு மாரி வீட்டில் செய்த பலகாரங்களை கொடுத்து எப்படி இருக்கு என கேட்க சூர்யா ரொம்ப நல்லா இருக்கு, எதுக்கு இவ்வளவு ஏற்பாடுகள் எல்லாம் என கேட்க இதெல்லாம் ஊர் காரர்கள் செய்தது, எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என சொல்கிறாள். 

மாரி-சூர்யா முதல் இரவு..

இங்கே வெளியே ஹாசினி மீனாவிடம் மாரிக்கும் சூர்யாவுக்கும் இன்னும் சாந்திமுகூர்த்தம் நடக்கல என சொல்ல மீனா அப்படினா அதை நடத்திடலாம் என சொல்கிறாள். பிறகு மாரி ரூமில் இருந்து வெளியே வர ஜோசியர் வீட்டுக்கு வர மாரியின் தாத்தா நீலகண்டன் மாரி, சூர்யாவுக்கு கல்யாணம் ஆகி நடக்க வேண்டியது எதுவும் இன்னும் நடக்கல அதான் முதலிரவுக்கு நாள் குறிக்க வர சொன்னதாக சொல்ல மாரி அதிர்ச்சி அடைகிறாள். 

பிறகு சூர்யாவை கூப்பிட சொல்ல அவளும் என்ன செய்வது என தெரியாமல் சூர்யாவை கூப்பிட போக அவனும் முதலிரவு என்ற விசயத்தை கேட்டு அதிர்ச்சி அடைகிறான். இருந்தாலும் பெரியவங்க முன்னாடி எதையும் காட்டிக்க வேண்டாம் என மாரி சொல்ல பிறகு சூர்யா வெளியே எழுந்து வருகிறான். இதை பார்த்து ஸ்ரீஜா கடுப்பாகிறாள். பிறகு ஹாசினி மற்றும் மீனா இருவரும் தனியாக சென்று ஏற்பாடு செய்த மட்டும் போதாது, சரியா நடக்கணும் அதுக்கு சிட்டுக்குருவி லேகியம் வேணும் எங்க கிடைக்கும் என பேசி கொண்டிருக்க இதை ஒட்டு கேட்கும் ஸ்ரீஜா இதை இப்படியே விடக்கூடாது என யோசிக்கிறாள். ஹாசினி மற்றும் மீனா கடைக்கு சென்று லேகியம் வாங்கி வருகின்றனர். 

காணத்தவராதீர்கள்..

முதலிரவு ஏற்பாடுகள் அனைத்தும் நடக்க ஹாசினி பாலில் சிட்டுக்குருவி லேகியத்தை கலக்கி கொடுத்து அனுப்ப ரூமுக்குள் மாரியும் சூரியாவும் அந்த பாலை குடிக்கின்றனர். மறுநாள் காலையில் மாரி வெட்கத்துடன் வெளியே வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியை இரவு 8 மணிக்கு காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | Modern Love Chennai: மாடர்ன் லவ் வெப் தொடரில் இணையும் 6 பெரிய படைப்பாளிகள் யார் யார் தெரியுமா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News