Kanaa Today Episodes: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கனா. இன்று என்ன நடக்கப்போகிறது என்பதைக் குறித்து பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பளார் என ஓங்கி அறைந்து சந்திரசேகர்:
இந்த சீரியலில் ராமச்சந்திரன் மல்லிகா என்ற பெயரில் சந்திரசேகரின் முதல் மனைவி தனது வீட்டில் தான் இருக்கிறார் என்ற உண்மையை சொல்ல சென்னை கிளம்பி வரும் நேரத்தில் ராஜவேலு தனது ஆட்களை வைத்து அவரை விபத்தில் சிக்க வைக்க பேச முடியாத நிலைக்கு செல்கிறார். இருந்தாலும் அவர் எப்படியாவது உண்மையை சொல்ல வேண்டும் என முயற்சிக்க அது முடியாமல் போகிறது, இன்னொரு பக்கம் அனன்யா தொடர்ந்து கிடைத்த தோல்விகளால் அன்பரிசி மீது கோபத்தில் இருப்பது மட்டுமல்லாம் வீட்டுலேயே குடித்து விட்டு பணத்தை திருட இதை பார்த்த அன்பரசி இந்த விசியம் பாட்டிக்கும் சந்திரசேகர் சாருக்கும் தெரிந்தால் பெரிய பிரச்னையாகிடும் என மறைக்க மறுநாள் சிவகாமி அன்பரசி பணத்தை திருடியதாக பழி போட சந்திரசேகர் பளாரென அறைந்து இரவில் நடந்த விசயங்கள் தெரியும் என அதிர்ச்சி கொடுக்கிறார். 


மேலும் படிக்க: இந்திரா சீரியல் அப்டேட்: கதிருடன் கல்யாணம்.. ரோஷினி விட்ட சவால், இந்திரா செய்ய போவது என்ன?



600 கோடி சொத்துக்கும் சொந்தகாரி யார்?
இதனை தொடர்ந்து வரும் நாட்களில் இந்த சீரியலில் நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது. அதாவது சிவகாமி இன்னும் 3 நாளில் அனன்யாவுக்கு பிறந்தநாள் வருவதால் அந்த பார்ட்டியில் வைத்து 600 கோடி சொத்துக்கும் சொந்தகாரி அனன்யா தான் என்பதை அறிவிக்க வேண்டும் என சொல்கிறாள். 


மாஸ் என்ட்ரி... அனன்யா அதிர்ச்சி:
அன்பரசியை பழி வாங்க துடிக்கும் அனன்யா தனது தாத்தா மூலமாக அன்பரசி வெளியே சென்ற போது அவளை கடத்தி விடுகிறாள். அனன்யாவின் பிறந்த நாள் பார்ட்டியில் சொத்துக்கு சொந்தக்காரி அனன்யா தான் என அறிவிப்பார்கள் என சிவகாமி சந்தோஷமாக இருக்க பாட்டி தனது முதல் பேத்தி வர போவதாக சொல்லி அதிர்ச்சி கொடுக்க கொஞ்ச நேரத்தில் ரிஷியாக ஜெய் ஆகாஷ் மாஸாக என்ட்ரி கொடுத்து மாடர்ன் உடையில் கலக்கலாக அன்பரசியை அழைத்து வர சிவகாமி, அனன்யா அதிர்ச்சி அடைகின்றனர். 



மேலும் படிக்க: அமுதாவும் அன்னலட்சுமியும்: செல்வாவுக்கு ஷாக் கொடுத்த அமுதா.. மேடையில் பேசியது என்ன?


மேலும் பாட்டி என்னுடைய முதல் பேத்தி அன்பரசி தான், இந்த 600 கோடி சொத்துக்கும் அதிபதி இவள் தான் என அறிவிக்க விஷ்வாவின் அம்மா உண்மையாகவே இவ தான் உங்க பேத்தியா? என கேட்டு விஷ்வாவுக்கு பெண் கேட்கிறாள். 


கனா சீரியல் இங்கே பார்க்கலாம்:
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்ற கோணத்தில் இந்த சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, எனவே கனா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள். கனா ஒரு தமிழ் குடும்ப நாடகம். 21 நவம்பர் 2022 அன்று ஜீ தமிழில் ஒளிபரப்பப்பட்டது. இந்த சீரியல் விளையாட்டு வீராங்கனையாக கனவு காணும் பெண்ணைப் பற்றியது. தர்ஷனா அசோகன், விஷ்ணு உன்னிகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும்  ஜீ5 (Zee5) ஓடிடி ஸ்ட்ரீமிங் தளத்தில் எந்த நேரத்திலும் இந்தத் தொடரைப் பார்க்கலாம்.


மேலும் படிக்க: சூப்பர் அப்டேட்... நேரடியாக தொலைக்காட்சியில் ரிலீஸாகும் பிரபல சீரியல் நடிகரின் படம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ