இந்திரா சீரியல் அப்டேட்: கதிருடன் கல்யாணம்.. ரோஷினி விட்ட சவால், இந்திரா செய்ய போவது என்ன?

Indira Today's Episode Update: கதிருடன் கல்யாணம்.. ரோஷினி விட்ட சவால், இந்திரா செய்ய போவது என்ன?  இந்திரா சீரியல் அப்டேட்

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 11, 2023, 10:09 AM IST
  • இந்திரா: வரும் நாட்களில் என்ன நடக்கவுள்ளது.
  • கேள்வி மேல் கேள்வி கேட்கும் கௌதம்.
  • இந்திராவை சந்தித்த ரோஷினி.
இந்திரா சீரியல் அப்டேட்: கதிருடன் கல்யாணம்.. ரோஷினி விட்ட சவால், இந்திரா செய்ய போவது என்ன?  title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘இந்திரா' சீரியல்.

இந்திரா: வரும் நாட்களில் என்ன நடக்கவுள்ளது

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இந்திரா. 

கடந்த வாரம் இந்த சீரியலில் கதிர் வீட்டில் பொய் சொல்லி விட்டு போன விசியம் கௌதம் தெரிய வந்த நிலையில் வரும் நாட்களில் நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது. 

கேள்வி மேல் கேள்வி கேட்கும் கௌதம்

அதாவது, வீட்டுக்கு வரும் கதிரை மடக்கி கெளதம் கேள்வி மேல் கேள்வி கேட்க சிக்கி தவிக்கும் கதிர் ஒருவழியாக சமாளித்து விடுகிறான். அடுத்து 60-ம் கல்யாணத்துக்கான வேலைகள் எல்லாம் நடந்து கொண்டிருக்க சுபா இந்திராவை சாப்பிட கூப்பிட அவள் என்னிடம் பணம் இல்லை என சொல்லி சாப்பாடு வேண்டாம் என சொல்கிறாள். 

மேலும் படிக்க | அடேங்கப்பா..சமந்தா வாங்கிய புதிய பிரமாண்ட வீடு..இவ்வளவு கோடியா?

இதை கேட்ட ஜெயா இன்னைக்கு சாப்பிட பணம் கொடுக்க வேண்டாம், அவ செய்யுற வேலைக்காக சாப்பிடட்டும் என சொல்கிறாள். பிறகு ராகினி திட்டம் போட்டு இந்திராவை மாலை வாங்கிக்கொண்டு வர வெளியே அனுப்ப இந்திரா மாலை கிடைக்காமல் அலைந்து திரிகிறாள். 

மேலும் படிக்க | ரீ என்ட்ரி கொடுக்கும் மீரா ஜாஸ்மின்

இந்திராவை சந்தித்த ரோஷினி

இந்த நேரத்தில் ரோஷினி இந்திராவை சந்திக்க நான் ஒரு வீடு வாங்கி இருக்கிறேன், நானும் கதிரும் அங்க பால் காய்ச்சி குடியேற போறோம், நீயாவது வா என சவால் விட்டுவிட்டு செல்கிறாள். 

அதற்கேற்றாற் போல 60-வது கல்யாணத்தில் கதிர் ஆசிர்வாதம் வாங்கி கொண்டு பாதியில் கிளம்பி செல்ல அவன் பின்னாலேயே இந்திராவும் பின் தொடர்ந்து செல்கிறாள். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திரா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

இந்திரா: சீரியலை எங்கு பார்ப்பது?

இந்திரா சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

பெங்காலி மொழி ஜீ பங்களாவின் சீரியலான அபராஜிதா அபுவை அடிப்படையாகக் கொண்டு ‘இந்திரா’ சீரியல் எடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு சிறிய நகரத்தின் ஆணாதிக்கக் குடும்பத்திலிருந்து வரும் இந்திரா என்ற பெண்ணின் கதை. இந்திரா பாலின பாகுபாட்டை எதிர்கொள்கிறார், ஆனால் அதை எதிர்த்துப் போராடி மரியாதை பெற ஒரு ஐஏஎஸ் அதிகாரியாகத் தீர்மானிக்கிறார். அவளுடைய மன உறுதி அவளுடைய கனவை நிறைவேற்ற உதவுமா என்பதை ஒட்டி கதைக்களம் நகர்கிறது. 

மேலும் படிக்க | கேமியோ ரோலில் லோகேஷ் கனகராஜ்! அதுவும் இவர் படத்திலா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News