செவ்வாய் பெயர்ச்சியின் கெடு பலன்களில் இருந்து தப்பிக்க ‘சில’ பரிகாரங்கள்!

கிரகங்களின் பெயர்ச்சி, கிரகங்களின் நிலை மாற்றம், கிரகங்களின் மஹாதிசை ஆகியவை அனைத்து ராசிகளிலும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, 9 கிரகங்களும் தங்கள் ராசிகளை அவ்வப்போது மாற்றிக் கொள்கின்றன. 

கிரகங்களின் பெயர்ச்சி, கிரகங்களின் நிலை மாற்றம், கிரகங்களின் மஹாதிசை ஆகியவை அனைத்து ராசிகளிலும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, 9 கிரகங்களும் தங்கள் ராசிகளை அவ்வப்போது மாற்றிக் கொள்கின்றன. இந்த கிரகப் பெயர்ச்சிகள் மற்றும் நட்சத்திர மாற்றங்கள் அனைத்து மக்களின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மார்ச் 13ஆம் தேதி செவ்வாய் தனது ராசியை மாற்றி மிதுன ராசியில் பிரவேசித்துள்ள நிலையில், மே 10ஆம் தேதி வரை மிதுன ராசியில் இருப்பார். 

1 /5

செவ்வாய்க் கிழமை குளித்த பின் சிவப்பு நிற ஆடைகளை அணியவும். இதற்குப் பிறகு, ஓம் க்ரான் க்ரீன் க்ரௌன் ச: பௌமே நமஹ் என்ற இந்த மந்திரத்தை குறைந்தது 3,5 அல்லது 7 முறை உச்சரிக்கவும்.

2 /5

செவ்வாய் கிழமையன்று அனுமனுக்கு வெண்பூசணியை அர்ப்பணிப்பதன் மூலம், ஒரு நபர் நல்ல பலன்களைப் பெறுகிறார். செவ்வாய்க் கிழமையன்று சிறிதளவு மல்லிகைப்பூ எண்ணெய் பயன்படுத்தி வர செவ்வாய் கிரகம் பலப்படும்.

3 /5

ஜோதிடத்தின் படி, செவ்வாய் கிரகத்தை வலுப்படுத்த, ஹனுமானை வழிபடுவது சிறப்பான பலன் தரும். இதுமட்டுமின்றி, இந்த நாளில் செவ்வாய் கிரகத்தை வலுப்படுத்த முடிந்தால், பகவான் ஹனுமானுக்கு வெற்றிலை சாற்றலாம்.  

4 /5

செவ்வாய் கிரகத்தை வலுப்படுத்த பவளம் அணியலாம். பவளம் செவ்வாய் கிரகத்திற்கான ரத்தினம் ஆகும். ஆனால் அதை அணிவதற்கு முன், ஜோதிடரின் ஆலோசனையைப் பெறுங்கள்.  

5 /5

செவ்வாய் கிரகத்தை வலுப்படுத்த, சிவப்பு வஸ்திரம், தாமிரம், கோதுமை, வெல்லம் போன்றவற்றை தானம் செய்வது மங்களகரமாக கருதப்படுகிறது.