வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் இயற்கை ஒரு சிறப்புப் போக்கைக் கொடுத்துள்ளது. அதன் கீழ் அது வாழ்கிறது. உதாரணமாக மற்ற விலங்குகளை வேட்டையாடி தன் வயிற்றை நிரப்புவது சிங்கத்தின் போக்கு. அதுபோலவே பாம்பால் விஷத்தை கக்காமல் இருக்க முடியாது. அதுபோலத்தான் மனிதர்களின் இயல்பு மனிதாபிமானமாகும். அதன் கீழ் மற்ற உயிரினங்கள் ஆபத்தில் இருக்கும்போது, அவற்றுக்கு உதவுவதை மனிதர்களாலும் விட முடியாது. இதை எடுத்துக்காட்டும் பல வீடியோக்கள் அவ்வப்போது சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. 


தற்போதும் இதற்கு சான்றாக ஒரு வீடியோ வெளிவந்துள்ளது. ஒரு நபர் தன் உயிரையும் பணயம் வைத்து  உலகின் மிக கொடூரமான விஷப்பாம்பின் உயிரைக் காப்பாற்றினார். இது பார்ப்பதற்கும் படிப்பதற்கும் மிக வியப்பளிக்கின்றது. 


மேலும் படிக்க | இரண்டு தலை பாம்பு..எலியை கடித்து குதறல்..பதற வைக்கும் வைரல் வீடியோ


இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஒரு இளைஞன் விஷ பாம்பை காப்பாற்றுவதைக் காண முடிகின்றது. பாம்புகளுக்கு தண்ணீரில் நீந்தும் திறமை உள்ளது. எனினும், அவை கிணற்றில் சிக்கிக் கொண்டால், வெளியே வர முடியாத நிலை ஏற்படுகிறது. அப்படி ஒரு விஷமுள்ள நாகப்பாம்பு கிணற்றில் சிக்கிக்கொள்கிறது. ஒரு இளைஞன் அந்த பாம்பை காப்பாற்றும் பொறுப்பை ஏற்று எவ்வித பயமுமின்றி கிணற்றில் இறங்குவதை வீடியோவில் காண முடிகின்றது. 


கிணற்றில் குதித்து பாம்பை காப்பாற்றும் இளைஞன்:


இளைஞன் கயிற்றின் உதவியுடன் கிணற்றில் இறங்கி பாம்பு பிடிக்கும் குச்சியால் பாம்பை பிடிக்கத் தொடங்குவதை வீடியோவில் காண்கிறோம். ஆனால், நாகப்ப்பாம்பு தண்ணீரில் வேகமாக நீந்தத் தொடங்குகிறது, இளைஞர் அதை மீண்டும் மீண்டும் அந்த கம்பைக் கொண்டு சிக்க வைக்கிறார். பின்னர் அவர் அதன் வாலைப் பிடித்தவுடன், பாம்பு வேகமாக அவரை நோக்கித் திரும்பி அவரைத் தாக்க முயற்சிக்கிறது. 


பாம்பு பிடிக்கும் இளைஞனுக்கு உதவியாக, பாம்பை போட, கிணற்றில் அவர் அருகில் ஒரு கருப்பு நிற பை தொங்கவிடப்பட்டுள்ளது. ஆனால் பாம்பு மீண்டும் மீண்டும் வெளியே வரத் தொடங்குகிறது. பாம்பை பிடித்து பையில் போட இளைஞன் பல விதங்களில் முயற்சிக்கிறார். ஆனால், அந்த பாம்பு ஒவ்வொரு முறையும் வெளியே வந்துவிடுகிறது. ஆனால், இறுதியாக அதை எப்படியோ பிடித்து இளைஞர் பைக்குள் அடைத்து விடுகிறார்.


வீடியோவை பார்த்து இளைஞனை பாராட்டும் மக்கள் 


 



இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் @kasargod_14 என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. காண்பதற்கு மிக அரிதான இந்த வீடியோவுக்கு லட்சக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். ‘அந்த இளைஞரின் நம்பிக்கை நம்மை வியக்க வைக்கிறது’ என ஒருவர் எழுதியுள்ளார். மற்றொரு பயனர் ‘இப்படி உயிரை பணயம் வைத்து காப்பாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை.. இதற்கு இன்னும் பல சிறந்த வழிகள் உள்ளன’ என கருத்து தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க | Tiger Video: சுருண்டு கிடக்கும் புலியை சீண்டினால் என்னவாகும்! வைரலாகும் புலிவேட்டை வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ