Viral Video: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


சமூக ஊடகங்களில் (Social Media) பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் (Viral Video) ஆகின்றன.  சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. இப்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.  


பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், சமீப காலங்களில் பாம்புடன் பலர் நட்பு கொள்வதை நாம் காண்கிறோம். எனினும், சில வீடியோக்களில் விலங்குகள் துன்புறுத்தப்படுவதையும் காண்கிறோம். இப்படிப்பட்ட வீடியோக்களுக்கு இணைய வாசிகள் கடுமையான விமர்சனங்களையும் அளிக்கின்றனர்.


சமீபத்தில் வைரலான வீடியோவில் இதே போன்ற ஒரு காட்சியை காண முடிகின்றது. இந்த வீடியோவில் (Viral Video), சிறுவன் ஒருவன் பாம்பை கயிறாக பாவித்து ஸ்கிப்பிங் ஆடும் காட்சி பதிவாகியுள்ளது. 


பாம்பை துன்புறுத்தும் சிறுவன் 


பத்திரிக்கையாளர் திவாகர் சர்மா இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, மிகவும் கொடூரமாக இருக்கிறது என எழுதியுள்ளார். இந்த வீடியோவில், சிறுவன் ஒருவன் ஒரு கையால் பாம்பின் தலையையும் மறு கையால் பாம்பின் வால் பகுதியையும் பிடித்து அதை கயிறு போல பயன்படுத்தி ஸ்கிப்பிங் விளையாடுவதைக் காண முடிகின்றது. 


ALSO READ | குஷ்பு 2.0: அன்று கொண்டையில் தாழம்பு, இன்று கொண்டையில் பாம்பு!!


ஸ்கிப்பிங் விளையாடும் சிறுவன் மிகுந்த மகிழ்ச்சியுடன் சிரிப்பதையும் வீடியோவில் காண முடிகின்றது. ஸ்கிப்பிங் செய்யும்போது, பலமுறை பாம்பு சிறுவனின் கால்களுக்கு அருகில் வந்து விடுகிறது. இது இருவருக்குமே ஆபத்து ஏற்படும் சூழலை ஏற்படுத்துகிறது. 


வாயில்லாத ஜீவன்களை வதைப்பது தவறு. எந்த உயிரையும் துன்புறுத்துவதற்கு மற்றவர்களுக்கு உரிமை இல்லை. மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் இந்த உலகில் வாழ சம உரிமை உண்டு என்பதை நாம் அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.


பாம்பு ஸ்கிப்பிங் கயிறான அந்த வீடியோவை இங்கே காணலாம்:



சிறுவனை கைது செய்ய கோரிக்கை


வைரலாகி வரும் இந்த வீடியோ மகாராஷ்டிராவில் எங்கோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. வீடியோ வெளியானதை அடுத்து, இணைய வாசிகள் மிகவும் கோவத்தில் இருக்கிறார்கள். பாம்பை (Snake) பாடாய் படுத்தும் அந்த சிறுவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கோரி வருகிறார்கள். 


'இந்த சிறுவனை உடனடியாக கைது செய்யுங்கள்' என பலர் கமெண்ட் பிரிவில் எழுதி வருகிறார்கள். இந்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கான லைக்குகள் கிடைத்து விட்டன. 


ALSO READ | சைக்கிள் ஓட்டி இணையத்தை கலக்கும் பச்சைக்கிளி: வைரலான வீடியோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR