வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகில் பல வகையான மனிதர்கள் காணப்படுகின்றனர். ஒருபுறம் சிலர் வாயில்லா ஜீவன்களுக்கு ஆதரவாகவும், அவற்றுடன் அன்புடனும் நடந்துகொள்கின்றனர். அவற்றுக்கு உதவ தங்கள் உயிரையும் பணயம் வைக்கின்றனர். மறுபுறம், விலங்குகளை காரணமின்றி துன்புறுத்தும் சில கொடியவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் செய்யும் சில வக்ர செயல்களையும் நாம் அவ்வப்போது சமூக ஊடகங்களில் காண்கிறோம். 


விலங்குகளுக்கு மனிதர்கள் செய்யும் கொடூரங்களை பார்த்து பல சமயம் இணையவாசிகள் கலங்கிப்போவதும் உண்டு. சமீபத்திலும், இது போன்ற ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இது காண்பவர்களுக்கு கடும் வியப்பையும் அதிர்ச்சியையும் அளிக்கின்றது. எனினும், வீடியோவில் இறுதியில் நடக்கும் விஷயம் நமக்கு நிம்மதி அளிக்கும் விதத்திலும் உள்ளது. 


சமீபத்தில் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அதில் ஒரு நபர் தனது தனது முட்டாள்தனமான செயலால் ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் சங்கடப்படுத்துவதைக் காண முடிகின்றது. இது ஒரு பழைய வீடியோ, இப்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இரக்கமற்ற மனிதர் ஒருவர் நாயின் இரு காதுகளையும் பிடித்து இரக்கமில்லாமல் அடிப்பதைக் காண்கிறோம். 


மேலும் படிக்க | உயிரை பணயம் வைத்து நாயை காத்த நாயகன்: மனதை தொட்ட வைரல் வீடியோ 


வீடியோவை பார்த்தால் ரத்தம் கொதிக்கும்


சமூக வலைதளங்களில் வெளியான இந்த வீடியோவை பார்த்து இணையவாசிகளின் இதயம் நொறுங்கித்தான் போகிறது. இந்த வீடியோவை ஐஎஃப்எஸ் அதிகாரி சுஷாந்த் நந்தா சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். வீடியோவில், ஒரு நபர் அப்பாவி நாயின் காதைப் பிடித்து மேலே தூக்குகிறார். அதில் நாய் வலியால் புலம்புவதைக் காணமுடிகிறது. இதைப் பார்த்து நமது ரத்தம் கொதிக்கிறது. 


நாய்க்கு உதவ வந்த பசு 


உதவிக்காக அழும் நாயை காப்பாற்ற யாரும் முன்வராதபோது, ​​​​மற்றொரு விலங்கு அதற்கு உதவ முன்வந்தது. வீடியோவில், ஒரு மாடு நாய்க்கு உதவ முன்வருவதைக் காண முடிகிறது. நாய்க்கு நடக்கும் கொடுமைகளை பார்க்கும் பசு, இதயமற்ற மனிதனை அதன் கொம்புகளால் தாக்குகிறது. பின்னர் அவரை தூக்கி எறிகிறது. தன் மீது நடந்த தாக்குதலுக்குப் பிறகு அந்த நபர் நாயை விட்டுச் செல்கிறார்.


பதற வைக்கும் வைரல் வீடியோவை இங்கே காணலாம்:



நபரை திட்டித் தீர்த்த இணையவாசிகள் 


அந்த வீடியோவில், IFS அதிகாரி சுஷாந்த் நந்தா, ‘இதயமற்ற மனிதனுக்கு அவர் செய்த செயலுக்கு ஏற்ற தண்டனை கிடைத்தது...கர்மா’ என எழுதியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுவரை இதற்கு 6 லட்சம் வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


‘விலங்குகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல பாடமாக இருக்கும்’ என ஒருவர் எழுதியுள்ளார். 


மேலும் படிக்க | கல்யாணத்திலேயே ‘குடுமிப்பிடி’ வம்பிழுத்த மணப்பெண்! ஷாக்கிங் வைரல் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ