டிஏ அரியர் சமீபத்திய செய்தி: புத்தாண்டில் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கக்கூடும். அரசு ஊழியர்களை இந்தச் செய்தி மகிழ்ச்சியடையச் செய்யும். ஊழியர்கள் நீண்ட நாட்களாக அகவிலைப்படியின் 18 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதில் ஒருமித்த கருத்து இன்னும் ஏற்படவில்லை. தற்போது புத்தாண்டையொட்டி அரசு தரப்பில் ஊழியர்களுக்கு சாதகமாக முடிவு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிலுவைத் தொகை குறித்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் என்ன?


கடந்த காலங்களில், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் சங்கத்தின் பிரதிநிதிகள் 18 மாதங்களுக்கான அகவிலைப்படி (டிஏ) நிலுவை கோரிக்கை தொடர்பாக அமைச்சரவை செயலாளரையும் சந்தித்தனர். ஆனால், அந்த நேரத்தில் நிலுவைத் தொகை குறித்த பேச்சுவார்த்தை எந்தளவுக்கு முன்னேறியது என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.


எனினும், வரும் நாட்களில் அமைச்சரவை கூட்டத்தில் பல விஷயங்களில் ஒருமித்த கருத்து எட்டப்படும் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதில், ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் நிலுவைத்தொகை குறித்து முக்கியமாக பேச்சு வார்த்தை நடத்தப்படும்.


மேலும் படிக்க | 7th Pay Commission: புத்தாண்டில் பம்பர் டிஏ உயர்வு, இன்னும் பல அறிவிப்புகள் 


டிஏ 3 முதல் 4 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது


மிக விரைவில், பல மாதங்களாக நீடித்து வரும் ஊழியர் அமைப்புகளின் கோரிக்கை குறித்தும் அரசு சாதகமான நடவடிக்கைகளை எடுக்கக்கூடும். இது தவிர, ஜனவரி 2023 இன் அகவிலைப்படியும் 3 முதல் 4 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த கூட்டத்தில், பி.எம்.கிசான் 13வது தவணையை விவசாயிகளின் கணக்கில் வரவு வைப்பது குறித்தும் முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


முன்னதாக, 18 மாத கால நிலுவைத் தொகையை வழங்க அரசு மறுத்துவிட்டது. ஆனால் பேச்சு வார்த்தைக்குப் பிறகு இது தொடர்பாக ஒருமித்த கருத்து எட்டப்படலாம் என்று ஊடகங்களில் பேசப்படுகிறது.


18 மாதங்களாக டிஏ கிடைக்கவில்லை


கோவிட்-19 தொற்றுநோய்களின் போது, ​​மத்திய அரசு ஊழியர்கள் ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான காலத்தில் அகவிலைப்படியை பெறவில்லை. கொரோனா தொற்றால் ஏற்பட்ட அசாத்திய சூழல் காரணமாக அகவிலைப்படி முடக்கி வைக்கப்பட்டது. நிலைமை சற்று சரியானவுடன் முடக்கம் நீக்கப்பட்டது. இந்த ஒன்றரை ஆண்டுகளில், அரசு அகவிலைப்படியை 11 சதவீதம் உயர்த்தியுள்ளது. ஊழியர்களின் பணத்தை அரசு பிடித்தம் செய்யக்கூடாது என்பதை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது என்பது ஊழியர்களின் வாதமாக உள்ளது. இது அவர்களின் உரிமை. நிலுவைத் தொகை கோரி ஊழியர்கள் நீதிமன்றத்தில் முறையிட்டனர். இது தொடர்பாக பிரதமர் மோடியிடம் ஓய்வூதியதாரர்களும் முறையிட்டனர்.


அகவிலைப்படி அரியர் தொகை எவ்வளவு கிடைக்கும்?


மத்திய ஊழியர்களின் டிஏ நிலுவைத் தொகையை வழங்க அரசு ஒப்புக் கொண்டால், அவர்களின் கணக்கில் பெரும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. லெவல்-3ல் உள்ள ஊழியர்களின் டிஏ நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், லெவல்-13 அல்லது லெவல்-14 ஊழியர்களின் டிஏ நிலுவைத் தொகை ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரை இருக்கலாம். 


இருப்பினும், ஊழியர் அமைப்புகளுடனான பேச்சுவார்த்தையில் தொகை தொடர்பாக ஒரு நடுத்தர வழி காணப்படலாம். டிஏ நிலுவைத் தொகையை ஒரே நேரத்தில் வழங்காமல் மூன்று தவணைகளில் அரசு வழங்கக்கூடும் என எதிர்பார்ப்புகள் உள்ளன. 


மேலும் படிக்க | 7th Pay Commission: DA, DR உயர்வு எப்போது? வெளியான சூப்பர் அப்டேட்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ