சூரியன் பெயர்ச்சி 2022: செப்டம்பர் 17 ஆம் தேதி கன்னி ராசியில் நுழைந்த சூரியன் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். சூரியனின் ராசி மாற்றம் கன்னி ராசியில் நிகழ்ந்த பிறகு சில ராசிக்கு சுபமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் சில ராசிகளுக்கு கன்யா சங்கராந்தி என்று அழைக்கப்படும் இந்த சூரிய பெயர்ச்சியால் மனக் கசப்பும், துர்பலன்களும் ஏற்பட்டுள்ளன. இந்த பலன்கள், சூரியன் கன்யா ராசியில் இருக்கும் அக்டோபர் 18 வரை தொடரும். எனவே, இந்த காலக்கட்டத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை என்பதைத் தெரிந்துக் கொண்டால், தீய விளைவுகளைப் போக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அக்டோபர் 18 ஆம் தேதி வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சூரியப் பெயர்ச்சி பாதகமான பலனைத் தரும் என்பதை அறிந்து கொண்டு, அவர்கள் அதற்கான பரிகாரங்களை செய்து ஆசுவாசத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். மிகவும் சுலபமான பரிகாரம், காலையில் சூரிய நமஸ்காரம் செய்வதுதான் என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அதிலும், புரட்டாசி மாதமான தற்போது சூரியனை தினசரி காலையில் எழுந்ததும் தொழுவது நல்ல பலன்களை கொண்டு வந்து சேர்க்கும். 


மேலும் படிக்க | கன்னியில் உருவாகும் திரிகிரஹி யோகத்தினால் ‘இந்த’ ராசிகளுக்கு அமோக பலன்கள்!


சூரிய பெயர்ச்சியால் எதிர்மறையான விளைவுகளை எதிர்கொள்வதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் இவை... 


ரிஷபம்: கன்னி ராசியில் சூரியனின் சஞ்சாரம், ரிஷப ராசியினருக்கு அசுபமானது. ரிஷப ராசிக்காரர்கள் சூரியனின் சஞ்சாரத்தின் போது சிரமங்களை சந்திக்க நேரிடும். அவர்களுக்கு நிதி இழப்பு ஏற்படலாம். இந்த நேரத்தில், எந்தவொரு பெரிய முடிவையும் எடுப்பதைத் தவிர்க்கவும் அல்லது மிகவும் கவனமாக முடிவெடுக்கவும், அதோடு, பெருமாளையும், அன்னை லட்சுமியையும் வழிபட்டால் நிவாரணம் கிடைக்கும்.


மிதுனம்: கன்னி ராசியில் சூரிய சஞ்சாரம் மிதுன ராசிக்காரர்களுக்கு மன உளைச்சலைத் தரும். வேலையில் தடைகள் வரலாம். எனவே, எந்த ஒரு வேலையும் செய்வதற்கு முன், வேலையை சரியாக திட்டமிடுவது சற்று நிவாரணம் அளிக்கும். நெருங்கியவர்கள் மற்றும் குடும்பத்தினருடனான உறவுகள் மோசமடையக்கூடும். அதற்கு வார்த்தைப் பிரயோகமே காரணமாக இருக்கும் என்பதால், வார்த்தைகளை சட்டென்று விட்டுவிட வேண்டாம். வாய்க் கட்டுப்பாடு, இப்போதல்ல, எப்போதுமே பலனையும் நலனையும் தரும். 


சிம்மம்கன்னி ராசியில் சூரியனின் சஞ்சாரம் சிம்ம ராசியினருக்கு சாதகமாக இருக்காது. அவர்களின் நிதி ஆதாரங்கள் சிக்கலில் சிக்கும், இதன் காரணமாக அவர்களின் நிதி நிலை மோசமடையலாம். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க வேண்டிய நேரம் இது. அனுபவமுள்ளவர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது. சூரிய நமஸ்காரமும், சிவ வழிபாடும் நிம்மதியைக் கொடுக்கும்.


கும்பம்: சூரியன் ராசி மாற்றத்தின் தாக்கம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. கும்ப ராசிக்காரர்களுக்கு பண இழப்பு ஏற்படலாம். இதன் காரணமாக, நிதி வாழ்க்கை ஓரளவு பாதிக்கப்படும். தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தவும்.


மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் தொல்லை தரும் நேரமாக இருக்கும். இந்த நேரத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். சக ஊழியர்களுடனான உறவுகள் சற்று மோசமாகவே இருக்கும். எனவே பணியிடத்தில் கவனமாக இருப்பது நல்லது, அவசியம் என்றால் மட்டுமே பேசவும், வாய்க்கட்டுப்பாடும் மனக்கட்டுப்பாடும் நல்லது.


மேலும் படிக்க | செப்டம்பர் 21 இந்திர ஏகாதசி! பித்ரு தோஷம் போக்கும் விசேஷமான நாள்!


மேலும் படிக்க | 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ