சனி மற்றும் புதன் பெயர்ச்சி: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் அனைத்தும் இயங்கிக் கொண்டே இருப்பதால், அவ்வப்போது தங்கள் ராசிகளை மாற்றிக்கொண்டே இருக்கின்றன. கிரகங்களின் ராசி மாற்றங்கள், அனைவரின் வாழ்க்கையிலும்  தாக்கத்தை ஏற்படுத்தும். சனியும் புதனும் அடுத்த மாதம் ராசி மாறுவது சிலருக்கு துயரத்தைக் கொடுத்தாலும், சில ராசிக்காரர்களுக்கு நல்லதைச் செய்யும். இந்த ராசிக்காரர்கள், தீபாவளியை நிம்மதியாக மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். தற்போது எதிரெதிர் திசையில் செல்லும் சனி மற்றும் புதன் ஆகிய கிரகங்கள், தங்கள் வக்ர கதி பயணத்தை முடித்துக் கொண்டு, வழக்கமான சுற்றில் செல்லவிருக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீதியின் கடவுளான சனீஸ்வரர் மற்றும் கிரகங்களில் இளவரசர் என்று அழைக்கப்படும் புதன் என இரு கிரகங்களும் அக்டோபரில் ராசி பரிவர்த்தனை செய்வதால், நான்கு ராசிக்காரர்களுக்கும் நல்ல காலம் பிறக்கப்போகிறது.


மேலும் படிக்க | சூரியனின் ராசி மாற்றம்: இன்று முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும்


நீதியின் கடவுளான சனீஸ்வரர், ஒருவரது சுப மற்றும் அசுப செயல்களுக்கான பலன்களை அளிப்பவர் என்று கூறப்படுகிறது. அதேசமயம் புதன் சிறப்பிற்கும் செழுமைக்கும் அதிபதியானவர். இந்த இரு கிரகங்களும் வக்ர கதியில் சென்றுக் கொண்டிருந்ததால் ஏற்பட்ட நிதிச் சிக்கல்கள் இனி நீங்கும் என்றே சொல்லலாம்.


சனி மற்றும் புதனின் அக்டோபர் மாத ராசி மாற்றத்தால் வாழ்வில் மகிழ்ச்சி பொங்க வாழும் 4 ராசிகள் இவைதான்: 


மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு சனி, புதன் சஞ்சாரம் மிகவும் சுப பலன்களைத் தரும். வியாபாரம் செய்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் வரும். வேலை செய்பவர்களுக்கு, பணியிடத்தில் மதிப்பு மரியாதை கூடும். நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.


மேலும் படிக்க | அக்டோபரில் கிரகங்களின் மிகப்பெரிய ராசி மாற்றம்: யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம் 


ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு, சனியும் புதனும் அக்டோபரில் நன்மை செய்வார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் சஞ்சாரம், சுப பலன்களைக் கொடுக்கும். இந்த ராசிக்காரர்களின் மரியாதை கூடும். அத்துடன், சமூகத்தில் சிறப்பு அந்தஸ்தும் கிடைக்கும்.  


மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த ராசி மாற்றம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பண வரத்து மிகவும் நன்றாக இருக்கும். சம்பாதிப்பதில் கவனம் செலுத்துவீர்கள், அதே போல சேமிப்பும் உயரும்.


தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கும் புதன் சஞ்சாரம் நன்மையைக் கொடுக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு, தீபாவளி பல செல்வ வளங்களைக் கொண்டு வந்து சேர்க்கும். வருமானம் அதிகரிக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | தீபாவளி முதல் இந்த 5 ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சி அலை வீசும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ