Grah Gochar 2024 September : அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தனது ராசியை மாற்றிக் கொள்ளும். கிரகங்களின் நிலையில் ஏற்படும் இந்த மாற்றங்கள் நம் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது ஜோதிட ஐதீகம். அந்த வகையில் அடுத்து வரவிருக்கும் 2024 செப்டம்பர் மாதத்தில் பல முக்கியமான கிரகப் பெயர்ச்சிகள் நடக்கப் போகிறது. குறிப்பாக இந்த மாதம் சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் தங்களின் ராசியை மாற்றப் போகிறது. அதனுடன் இந்த மாதம் கிரங்களின் சேர்க்கையும் நடைபெறும். இதனால் பல யோகங்கள் உருவாகும். இந்த யோகங்கள் அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கும். எனவே இந்த மாதம் கிரகங்களின் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செப்டம்பர் 2024 கிரகப் பெயர்ச்சி:


சூரியப் பெயர்ச்சி செப்டம்பர் 2024 - கிரகங்களின் ராஜாவான சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றும். அந்த வகையில் சூரியனின் பெயர்ச்சி செப்டம்பர் மாதம் நடுப்பகுதியில் விழுகிறது. செப்டம்பர் 2024 இல் சூரியப் பெயர்ச்சி திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2024 அன்று நடைபெறும். சூரியன் கன்னி ராசியில் பெயர்ச்சி அடைந்து அக்டோபர் 17 ஆம் தேதி வரை கன்னி ராசியில் இருப்பார்.


மேலும் படிக்க | September grah gochar: செப்டம்பர் மாத கிரக பெயர்ச்சிகள்.. பொருளாதார வெற்றி, அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்கு


புதன் ராசி மாற்றம் செப்டம்பர்- கிரகங்களின் அதிபதியான புதன் சுமார் 21 நாட்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றும். அந்த வகையில் தற்போது, ​​புதன் கடக ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறது, வருகிற செப்டம்பர் 4 ஆம் தேதி, புதன் பெயர்ச்சியாகி சிம்ம ராசியில் நுழையும். இதன் பிறகு செப்டம்பர் 23 ஆம் தேதி புதன் கன்னி ராசிக்குள் நுழையும். இப்படி செப்டம்பரில் புதன் பெயர்ச்சி இருமுறை நடக்கவிருப்பதால் சில ராசிக்காரர்களுக்கு தொழில்-பொருளாதார நிலை பாதிக்கப்படும்.


சுக்கிரன் ராசி மாற்றம் செப்டம்பர்- செல்வம் மற்றும் மகிழ்ச்சிக்கு காரணியான சுக்கிரன் தற்போது கன்னி ராசியில் பயணித்து வருகிறது. வருகிற செப்டம்பர் 18 ஆம் தேதி, 2024 அன்று சுக்கிரன் துலாம் ராசிக்குள் நுழைகிறது. துலாம் ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களின் நிதி நிலை, காதல் வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கையையும் பாதிக்கும்.


செப்டம்பர் மாதத்தில் இந்த 5 ராசிக்காரர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்:
5 ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் நடக்கப் போகும் கிரகப் பெயர்ச்சி சில பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். எனவே இந்த ராசிக்காரர்கள் இந்த மாதம் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்த ராசிகள் - ரிஷபம், மிதுனம், கன்னி, விருச்சிகம் மற்றும் மகரம் ஆகியவை ஆகும். இந்த ராசிக்காரர்கள் யாருடனும் வாதிடக்கூடாது. புத்திசாலித்தனமாக செலவு செய்ய வேண்டும். வேலையில் தாமதம் ஏற்பட்டால் பொறுமையாக இருங்கள்.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Guru Vakra Peyarchi 2024 : ரிஷபத்தில் வக்ரமாகும் குரு! வக்ர இயக்கத்தால் பணமழையில் நனைந்து மகிழும் ராசிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ