கிரகங்களின் அரசரான சூரியனும், நவகிரகங்களில் புத்திகாரகர் என்று அழைக்கப்படும் புதனும் இணைந்து வரும் கிரக இணைப்பினால் எந்தெந்த ராசிக்காரர்களுக்குசுப பலன்கள் இருக்கும் என்பதை தெரிந்துகொள்வோம். ஜோதிடத்தில், கிரகங்களின் சேர்க்கை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மே 31 அன்று, ரிஷப ராசியில் சூரியன் மற்றும் புதன் இணைவதால் ஏற்படும் இணைப்பு 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நவகிரகங்களில் சூரியன் மற்றும் மற்ற எட்டு கிரகங்களின் நிலையும் உன்னிப்பாகக் அவதானிக்கப்படுகிறது. எல்லா கிரகங்களும் அவ்வப்போது தங்கள் ராசியை மாற்றிக் கொண்டே இருக்கின்றன, அதனால் கிரக சேர்க்கை உருவாகிறது. அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள், ஒரே ராசியில் இருக்கும்போது, இந்த கிரக சேர்க்கை ஏற்படுகிறது.


மே 31 அன்று ரிஷப ராசியில் சூரியனும் புதனும் இணைகின்றன அதன் பலன் எல்லா ராசிக்காரர்களுக்கும் வெவ்வேறுவிதமாக இருக்கும். சில ராசிக்காரர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் பொருளாதாரம் மற்றும் தொழிலில் சுப பலன்கள் கிடைக்கும், சில ராசிக்காரர்களுக்கு நன்மையும் தீமையும் கலந்து கலவையான பலன்கள் இருக்கும்.


சூரியன் மற்றும் புதன் இணைவதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்குக் கொண்டாட்டம் என்பதை தெரிந்து கொள்வோம்.


மேலும் படிக்க | தமிழ் மாதங்களுக்கு பெயர் கொடுக்கும் சூரியனின் நாமங்கள்! சூரியப் பெயர்ச்சி தரும் 12 பெயர்கள்!


சூரிய புதன் இணைப்பினால் பலனடையும் ராசிகள்
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சூரியன் மற்றும் புதன் சேர்க்கையால் பல நன்மைகள் ஏற்படும். நிதி நிலைமை மேம்படும், வருமானம் அதிகரிப்பதற்கான புதிய வழிகள் உருவாகும். இதன் மூலம், வணிகத் துறையிலும் மக்கள் பலன்களைப் பெறலாம். இந்த காலகட்டத்தில் ரிஷப ராசிக்காரர்கள் செய்யும் முதலீடுகள் நல்ல லாபத்தை தரும் மற்றும் பல வகையான தடைகளும் அகன்று காரிய சித்தி ஏற்படும்.


கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு புதாதித்ய யோகத்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வராமல் தேங்கிக் கிடந்த பணம் திரும்ப கிடைக்கும். இந்த காலகட்டத்தில் கடின உழைப்பு நல்ல பலனைத் தரும் மற்றும் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடும் வாய்ப்பு கடக ராசிக்காரர்களுக்கு நிம்மதியைக் கொடுக்கும்.


சிம்மம் 
சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியன்-புதன் இணைவதால் ஏற்படும் புதாதித்ய யோகம் அற்புதமான பலன்களைத் தரும். நிதி நிலைமை மேம்படும் மற்றும் பணியிடத்தில் பதவி உயர்வுகள் ஏற்படலாம். நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த சில நல்ல செய்திகள் வந்து சேரும். நீண்ட பயணத்திற்கான வாய்ப்புகள் உள்ளன என்றால், தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் நல்ல நேரம் இது.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது)


மேலும் படிக்க | சாகாவரம் பெற்றாலும் அகங்காரமே எமனாகும்! விஷ்ணுவின் நரசிம்மர் ஜெயந்தி தினம் மே 21!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ