கடந்த சில காலமாகவே சேலம் மாநகர் மற்றும் அதனைச் சுற்றி அமைந்திருக்கும் எளிய மக்களின் வசிப்பிடங்களில் எல்லாம் ஒருவித எதிர்ப்பார்ப்புடன் கூடிய பரபரப்பு நிலவுகிறது.  அந்தப் பரபரப்புக்கு காரணம் கையில் சுருட்டி மடக்கிய மஞ்சள் பையுடன் வெள்ளை வேட்டி, வெள்ளை அரைக்கை சட்டையுடன் காட்சியளிக்கும் கருமை நிறம் கொண்ட எளிமையான ஒரு மனிதர். அவர் அணிந்திருக்கும் கண் கண்ணாடி கூட வெண்மை நிறம் தான். நெடிய உயரத்துடன் முகத்தில் புன் சிரிப்புடன் கூடிய அமைதியான முகம்.  அந்த மனிதர் பெயர் ஆர் பார்த்தசாரதி. பி.டெக் பட்டதாரி. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | விஜயதரணி விலகல்: காங்கிரஸ் ரியாக்ஷன் - பறிபோகும் எம்எல்ஏ பதவி..!


சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூரில் எளிமையான விவசாய குடும்பத்தில் பிறந்தவர் தான் இந்த பார்த்தசாரதி. தமது பள்ளி படிப்புகளை சேலம் மாவட்டத்திலேயே படித்த பார்த்தசாரதி, உயர் படிப்புகளை வெளி மாநிலங்களில் முடித்துள்ளார். பி.டெக் முடித்தவுடன் சுயமாக தொழில் தொடங்கி தொழில் அதிபராக உயர்ந்து இன்று நல்ல நிலையில் இருக்கும் ஒரு தொழில் அதிபர் தான் இந்த பார்த்தசாரதி. தான் நல்ல முறையில் இருந்தாலும் தான் பிறந்து..வளர்ந்து.. படித்த.. இந்த சேலம் மாவட்டத்தின் எளிய மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவரின் அடி மனதில் இருந்து வந்துள்ளது.


நம்மால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு உதவிகரமாக இருக்க வேண்டும் என்ற அந்த எண்ணத்தின் விளைவாக தம்மை சுற்றி இருக்கும் மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வந்துள்ளார். இதன் தொடர்ச்சியாகவே, இயலாதவர்களுக்கு  இயன்றதைச் செய்வோம் என்னும் முழக்கத்துடன் இன்றும் சேலம் மாவட்டம் முழுமைக்கும், தன்னாலான உதவிகளை செய்து கொண்டு வருகிறார். இதன் காரணமாக சேலம் மாவட்டத்தின் தேநீர் கடைகள், ஆட்டோ நிறுத்தங்கள், சாலையோர கடைகள், காய்கறி கடைகள் என எளிய மக்களின் வசிப்பிடங்களில் எல்லாம் சர்வ சாதாரணமாக இவரையும், இவரைப் பற்றிய பேச்சையும் காண முடிகிறது.


குறிப்பாக, வறுமையின் பிடியில் சிக்கி, படிப்பை தொடர முடியாத மாணவ மாணவிகள், சாதனை படைக்க தனது கனவுகளை சுமந்து கொண்டிருக்கும் ஏழை எளிய விளையாட்டு வீரர், வீராங்கனைகள் என்று அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகிறார். அதோடு குடும்பத் தலைவரை இழந்து வறுமையின் பிடியில் இருக்கும் குடும்பம், வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் இளைஞர்கள் இளம் பெண்கள், தொழில் முனைவோர் என்று பலரின் வாழ்க்கையில் இவர் ஒளியேற்றி வருகிறார். மேலும் துணையில்லாமல் தவிக்கும் ஆதரவற்றோர், கண் பார்வை இல்லாத முதியோர், நோயின் பிடியில் சிக்கி மருத்துவ உதவி வேண்டி நிற்போர் என்று இவரின் உதவிக்கரம் நீள்கிறது.


இதுபோன்ற உதவி தேவைப்படுவோர், தம்மை எளிதாக அணுகும் விதமாக, தமது தொடர்பு எண்ணை தமது முகநூல், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற வலை தளங்களில் பதிவிட்டுள்ளார். இதில் சிறப்பம்சம் என்னவென்றால், உதவி தேவைப்படுவோர் யாவரும் பார்த்தசாரதியின் வீட்டு வாசலிலோ அல்லது அவரது அலுவலகத்தின் இருக்கைகளிலோ நாட்கணக்கிலோ அல்லது மாத கணக்கிலோ காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் பதிவிட்டுள்ள தொடர்பு எண்ணில் அழைத்தாலே போதும், உதவி உங்களின் வீடு தேடி வரும். அவருடைய ஆட்கள் மூலமாக அல்ல, பார்த்தசாரதியே உதவி வேண்டுவோரின்  வீடு தேடி நேரடியாக வருகிறார்.


 பாதிக்கப்பட்டுள்ளோரின் வீட்டில் அவர்களில் ஒருவராக, தரையில் அமர்ந்து ஆதரவுடன் உரையாடுகிறார். அவர்களின் குறைகளை அவர்களிடமே கேட்டு அறிகிறார். அந்த உரையாடலில், எளிய ஏழை மனிதர்களிடத்தில் மன தைரியத்தையும், வாழ்க்கையில் ஒரு பிடிமானத்தையும், ஏற்படுத்தி செல்கிறார்.  பார்த்தசாரதி வந்து சென்றவுடன், அந்த குடும்பங்களில் நம்பிக்கை எனும் ஒளி  தெரிகிறது.  உங்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமாயின், இதோ உங்களின் இக்கட்டான நேரத்தில் உதவ காத்துக் கொண்டிருக்கும் பார்த்தசாரதியை அழையுங்கள். உதவிக்குதொடர்பு கொள்ள வேண்டிய எண்:7397763533


மேலும் படிக்க | மோடியை எதிர்க்கும் துணிவு யாருக்கும் இல்லை - அண்ணாமலை பேச்சு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ